Wednesday 24 June 2020

சாணக்கியர் கதை Tamil story

                          பிறருக்கு என்று ஒதுக்கப்பட்ட உடமைகளைத் தனக்கெனப் பயன்படுத்தினால் 'திருடனுக்கு ஒப்பானவன்' என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தவர் சாணக்கியர். அவர் வைத்திருந்த ஒட்டைக்கம்பளி கதை தான் இது. மிகவும் சுவாரசியமான கதை. இக்கதையில் திருடனும் எப்படி திருந்துகிறான் என்று பார்போம்.

             சாணக்கியர் மற்றவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என ஒரு நிகழ்வினை நிகழ்த்தினார். ஒரு சமயம் நாட்டில் ஏழைகள் குளிரால் மிகவு‌ம் துன்பப்பட்டு வந்தனர். ஏழைகள் அனைவருக்கும் கம்பளி போர்வைகள் கொடுக்கவேண்டுமென சாணக்கியர் சந்திரகுப்த பேரரசரிடம் சொன்னார். பேரரசரும் ஒப்புதல் அளித்து ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய போர்வைகள் அனைத்தையும் சாணக்கியர் குடிசை வீட்டில் வைத்து வழங்குமாறு கூறிவிட்டார். 
               நாளை ஏழைகளுக்கு போர்வை வழங்க சந்திரகுப்த பேரரசர் உத்தர விட்டுள்ளார். போர்வைகள் அனைத்தும் சாணக்கியர் வீட்டில் வைத்து வழங்கப்படும் என்று தண்டரா போட்டுச்சொன்னார்கள். இதைக்கவனமாக கேட்ட திருடர்கள் இன்று இரவு சாணக்கியர் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள். திருடன் ஒருவன் கம்பளி போர்வைகளைக் களவாடிக் கொண்டு வந்து வேறு ஊரில் விற்று பணக்காரர்களாகி விடுவோம் என்று கூறினான். 
            அன்று இரவு அமாவாசை நிலவே வானில் தெரியவில்லை. பயங்கரமான இருட்டு. திருடர்கள் திட்டமிட்டபடி சாணக்கியர் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அனைவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. அங்கு ஒரு பக்கத்தில் புதிய கம்பளி போர்வைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் சாணக்கியர் கிழிந்து போன கம்பளி போர்வையை போர்த்தி படுத்திருந்தார். அதைக் கண்ட திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 
              திருடர்களின் தலைவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்னடா இது. புதுக்கம்பளிகள் நூற்றுக்கணக்கான அடிக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாணக்கியரோ கிழிந்த பழைய போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து இருக்கிறார். என்னகாரணம் என்றுதிருடர்களின் தலைவர்  யோசித்தான். தன் மனதில் இருக்கும் சந்தேகத்தைச் சாணக்கியரிடமே கேட்டு விடுவதென முடிவு செய்தான். 
       சாணக்கியர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். உறங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பி...தனது சந்தேகத்தைக் கேட்டான். நாங்களாவது கிழிந்து போன கம்பளிகளை வைத்துள்ளேன். மற்ற ஏழைகளோ கிழிந்த கம்பளி கூட இல்லாமல் இருக்கிறார்கள். இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் பேரரசர் இந்தக்கம்பளிகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்த ஏழைகள் இந்தப்புதுக்கம்பளியின் சொந்தக்காரர்கள். அதை எடுத்து நானும் எங்கள் குடும்பத்தினரும் போர்த்திக்கொண்டால்...நாங்களும் திருடர்கள் தானே...அதனால் தான் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றார். 
           சாணக்கியர் சொன்ன வார்த்தைகள் திருடர்களின் மனத்தினை நெகிழச்செய்தது. "அய்யா! எங்களை மன்னித்து விடுங்கள் ...கம்பளிகளை திருட வந்த எங்க கண்களையெல்லாம் திறந்து விட்டீர்,இனி திருடவே மாட்டோம்... உழைத்து உடமைகளைப்பெறுவோம்"என்று சொல்லிவிட்டு சென்றனர். 
         பிறருக்கு நீ சொல்லும் அறிவுரையை நீயே பின்பற்றினால் நீ வாழ்வில் வெற்றியைச் சுலபமாக அடையலாம் என்ற வார்த்தையைப் பின்பற்றி வாழ்ந்தவர் சாணக்கியர். 

1 comment:

Super useful ideas thank you reading