Thursday 18 June 2020

மன அழுத்தத்தைக்கண்டுபிடி mental stress /health tips

           மன அழுத்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என எளிதாக கண்டுபிடித்து விடலாம்."அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
என்பது பழமொழி. அதன் படி ஒருவரைப் பார்த்த உடனே அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளாரா?என்பதை கண்டுபிடித்து விடலாம். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன அழுத்தம் குறைக்க என்ற பதிவு கீழே உள்ளது. Read more தொட்டு படிக்கவும்.
                  
மன அழுத்தம் காரணமாக அவர்களைச் சுற்றி உள்ள மனித உறவுகளில் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அவர் உறவினர்கள் மீது சந்தேகப்படுவார். அவர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பிறரிடம் சொல்வார். அதாவது வதந்திகளைப் பரபரப்புவார். 
பிறர் மீது பொறமைப்பட்டு போட்டியிடுவார். 
பிறரைக் கண்டு பயப்படுவார், பிறர் நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பார். 
உற்றார், உறவினர்கள் உடன் நெருங்கி பழக மாட்டார். 
அவர்களைப் பார்த்த உடன் முகத்தில் கடுங்கோபம் வந்து விடும். இதனால் அவர்களை விட்டு விலகிச் செல்வார். 
மன அழுத்தம் அதிகமாக உள்ளவரைக் கண்டு பிடிக்க அவர்களின் உணர்வுகள் உதவும். 
அடிக்கடி அழுது புலம்பி கொண்டு இருப்பார். 
அவர் வாழ்க்கை வெறுமையாக உள்ளதாகவும், பயனற்றதாக போய்விட்டது என நினைப்பார். 
அவரிடம் பதற்றம், சங்கடம், கடுமையான கோபம் போன்றவை இருக்கும். 
சதாரண செயலில் கூட தவறு நடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் குற்ற உணர்வு உடன் நடந்து கொள்ளுவார். 
மனஅழுத்தம் அதிகமாக உள்ளவரைக் கண்டுபிடிக்க அவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் உதவும். மன அழுத்தம் காரணமாக தூக்கமில்லாமல் அலைவார்கள். உடனே எரிச்சல் ஏற்பட்டு பேசுவதற்கு சிரமம் படுவார்கள். 
வேகமாக படபடவென்று பேசுதல், அவசரமாக சாப்பிடுதல், வேகமாக நடத்தல் போன்ற நடத்தையில் மாற்றம்(behaviour change)
ஏற்படும். 
அதிக அளவில் போதைப்பொருட்களை உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வருவார். 
அவர் வெளிப்புற தோற்றத்தைப்பற்றி எண்ணாமல் அழுக்கான ஆடைகளை அணிந்தும், குளிக்காமலும் சர்வகாலமும் குடி போதையிலே இருப்பார். 
ஒரு இடத்திற்கு செல்ல சரியான நேரத்தில் ரெடி ஆகாமல் லேட்டாக ரெடியாகி அவசர அவசரமாக சென்று விபத்தை ஏற்படுத்துவார் 
என்னை ஏமாற்றி விட்டார் என்று அவர் நினைத்துக் கொண்டு இருப்பார். 
என்னால் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது, அவனை ஒரு கைப்பார்த்து விடவேண்டும் என்று சொல்வார். 
என்னை அனைவருக்கும் பிடிக்க வேண்டும்,நான் நன்றாக செயல் பட வேண்டும் என அவசரப்பட்டுவிடுவார். 

மன அழுத்தம் காரணமாக குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்படும். 
அதிகமாக கத்திப் பேசுவதால் வாய் உலர்தல் ஏற்படும். எனவே இதய துடிக்கும் விகிதம் அதிகமாகி இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயம் சம்பந்தமான உபாதைகள், பிணிகள், தலைவலி ஏற்படும். 
மன அழுத்தம் காரணமாக பதற்றத்துடன் பேசுவதால் உடலில் சோர்வு ஏற்படும். உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். 
இந்த அறிகுறிகள் வைத்து மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து விடலாம். 
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு சரியான முறையில் மன ஆறுதல் பெற உதவினால் அவரும், அவர் குடும்பமும் வளம் பெறும். 
தீய எண்ணங்களை உனக்கு சொந்தமாக்கி கொள்ளாதே! 
வார்த்தைகள் முக்கியம் அல்ல, அர்த்தங்கள் தான் முக்கியம். 

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading