Wednesday 10 June 2020

பாரி வள்ளல் / Parivallal

                   பாரி வள்ளல் 

கடையேழு வள்ளல்களுள் ஒருவர்

                 கடையேழு வள்ளல்களுள் ஒருவர், "பாரி வள்ளல்". ஆதி மொழி  தமிழ், முதல் மொழிதமிழ், செம்மை மொழிதமிழ் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. 
             இந்த சங்க இலக்கியத்தில் கடையேழு வள்ளல்களுள் பாரி வள்ளல் என்ற உடனே நாம் நினைவிற்கு வரும் முல்லைக்குத் தேர் கொடுத்தப்பாரி. 

பறம்பு  மலையை ஆட்சி செய்த மன்னர் பாரி. 

பறம்புமலை

               பறம்புநாடு பாண்டிய நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தது. 
                 இங்குள்ள மலை பறம்புநாட்டில் உள்ளதால் "பறம்புமலை "எனழைக்கப்பட்டது. இஃது இப்பொழுது "பிரான் மலை"என்று வழங்கப்படுகிறது. 
பறம்புமலையின் சிறப்பு

              பறம்புமலையில் சந்தனம், வேங்கை முதலிய மரங்கள் மிகுந்திருந்தன. ஆதலால் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் விறகுக்காச் சந்தனக் கட்டைகளையே பயன்படுத்தினர். இங்கு பல இனிய நீரை தரும் அருவிகள் இருந்தது. மலையில் தேன், பலா, மூங்கில், அரிசி முதலியன உழவரின் முயற்சியில் விளைந்தன. 

வேள்   _பாரி நாட்டின் சிறப்பு 

              மூந்நூறு ஊர்களையும் சேர்த்து பறம்புமலையை தலைநகரமாக கொண்டு ஆண்டவன் பாரி என்னும் குறு நில மன்னர். இவர் கடையேழு வள்ளல்களுள் ஒருவர்.
                     பாரி வேளிர் குலத்தலைவன். ஆகவே இவர் வேள்பாரி எனப்பட்டான். 'வேளிர்' என்பவர் முடியுடைய மன்னரிடத்துப் பெண் கொடுத்துப்பெண் கொள்ளும் தன்மை பெற்றவர்கள். பாரி தன் கருத்தொத்த  மங்கை நல்லாளை மணந்து அவளுடன் சேர்ந்து இன்ப வாழ்வு வாழ்ந்து வந்தார். 
                              பாரி சிறந்த கல்வி அறிவு பெற்றவன். அவைக்களத்தில் புலவர் பெருமக்களைப் பெற்றிருந்தான். புலவர் பெருமக்கள் உடன் பேசிப்பேசி பல கருத்துகளை அறிவதே தனக்குரிய பேரின்பமெனக் கொண்டான்.

கபிலர்

             கபிலர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர்; அந்தண மரபினர்; தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றவர். தம் வயொத்தப்புலவரால் பாரட்டப்பெற்றவர்

                    பாரியின் அரசவையில் புலவராகக் கபிலர் இருந்தார். பாரியின் தன் இரு மகள்களையும் கபிலரிடமே தமிழ் கற்குமாறு செய்தார். அம்மகளிரும் கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்ந்தார்கள். 
இன்ப வாழ்க்கை 
                    தனது இரு பெண் குழந்தைகளின் அறிவின் திறத்தை அவர்கள் வாய் மொழியால் கேட்டு மகிழ்வார். பாரி கபிலரிடமே சென்று தமிழ் திறமையை பாராட்டுவார். பாரி தனது மகளுடன் மலை பகுதிகளில் சென்று இயற்கை ரசித்து இல்லம் திரும்புவது வழக்கம். 

முல்லைக்குத்தேர்  - பாரி


             பாரி, ஒரு நாள் மாலை இளவேனில் காலம். தான் பொன்னால்ஆன தேரில் மேல் ஏறி மலை வளம் சென்றான்; மலர்சோலை வழியே  செல்லும்படி தேர் பகனுக்குக்கட்டளை இட்டான். அந்த அடர்ந்த மலர்ச்சோலை அவர் மனம் மயங்கினார். 
              அந்த வனப்பகுதியில் அழகாக பூத்துக் குலுங்கிய முல்லைக்கொடி படர்ந்துச் செல்லக்  கொழுகொம்பு இன்றி தவிர்த்தது.பாரி  மனம் பதறினார். மனம் கலங்கினார். தன் வருத்தத்தைப் பிறருக்கு கூறி மாற்றி கொள்ளத் திறனற்ற அம்முல்லைக்கொடியின் அருகில் தன் பொன்னால்ஆன தேரை அது படருமாறு நிறுத்தி சென்றான். 
               அஃறிணைப் பொருள்களிடத்தும் இத்துணை பேரன்பு உடைய இவன் ,தன் குடிமக்கள் இடத்தில் எத்தகைய அன்புடையனாய் இருந்தார் என்று கூற வேண்டுமா? 
        இம்மன்னனின் அருங்குணத்தை கருதியே புலவர்கள் இவனை கடையேழு வள்ளல்களுள் ஒருவனாக வைத்து போற்றினர். 

பாரியின் கொடைசிறப்பு 

        பாரி வள்ளல் தன்னை நாடி வந்த புலவர், பாணர், விறலியர், கூத்தர் முதலியோர்க்கு இல்லை என்னாது அளவின்றி பொருள் ஈந்தான்; அவர் யார் வந்து தானம் கேட்டாலும் இல்லை என்றுச்சொல்வதில்லை. பாரி தன் நாட்டு மக்களைத் தன் உயிர் போல்  எண்ணி அவர்களுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருந்தார். 
               பாரியின் கொடைசிறப்பு !!
நாமும் கொடைசெய்ய தூண்டும் !!
     இன்னும் நிறைய படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more


    இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும். 

1 comment:

Super useful ideas thank you reading