H
Showing posts with label Health tips. Show all posts
Showing posts with label Health tips. Show all posts

Sunday 1 November 2020

உளுத்தம்பருப்பின் பயன்கள் / Ulundhu benefits in tamil

 உளுத்தம்பருப்பின் பயன்கள் 

       நாம் தினமும் காலை, இரவு உண்ணும் உணவில் உளுந்து இட்லி, தோசை, வடை போன்றவற்றில் சேர்த்து கொள்கிறோம். உளுந்து வடை அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடிக்கும். உளுந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ளும் புறமும் எண்ணற்ற நன்மைகளை அடைகிறோம்.
உளுந்து வடை 

     உளுந்தம் பருப்பில் உள்ள சத்துகள் 

         உளுந்து நூறு கிராமில் புரதம்  25 கிராம், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம், மாக்னீசு, கால்சியம், நார் சத்து என பல வகையான சத்துகள் நிறைந்து உள்ளது. 

உளுந்தம் பருப்பின் நன்மைகள் 

        கழுத்து வலி, எலும்பு இணைப்புகளின் வலி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை உளுத்தம்பருப்பு களி செய்து சாப்பிட்டு வந்தால் வலி குறையும். 
உளுந்து
        ஆஸ்டியோ போரோஸிஷ் என்ற எலும்புக்குறை நோய் சரிசெய்ய கால்சியம் சத்து அதிகம் உள்ள உளுத்தம்பருப்பு சேர்த்து கொள்ளவும். 
         நமது தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்க புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ள உளுத்தம்பருப்பு உள்ளும் புறமும் பயன்படுத்த வேண்டும். 

     சீரான செரிமான மண்டலம் செயல்பாடு அதிகரிக்க உளுத்தம் பருப்பை பொடிசெய்து உணவில் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.
       அடிக்கடி மலச்சிக்கல், குடல் பிரச்சனை தீர்க்க தினமும் காலை வேளையில் உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
       வலிமையான உடல் வளர்ச்சி வேண்டுமா? தசை வலிமை பெற, தேகம் பொலிவுபெற கண்டிப்பாக உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
        வளரும் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி, மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு உளுந்து பொடிசெய்து நல்லெண்ணெய் கலந்து உணவு ஊட்டும் போது ஆரோக்கியமும் மேன்மை அடையும். 
       வயதானவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உளுந்தம் களி சாப்பிட்டு வந்தால் நோய் கட்டுக்குள் வரும். 
       இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த பொட்டாசியம் சத்து நிறைந்த உளுந்தம்பருப்பு சாப்பிட வேண்டும். 
        உடல் குளிர்ச்சி அடைய உளுத்தம்பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சூடான உடல் தேகம் கொண்ட உளுத்தம்பருப்பு சாப்பிடலாம். 
      கருப்பு உளுந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். 

       எலும்பு முறிவு ஏற்பட்டவருவரின் வெளிப்புறத்தில் கட்டு போட உளுந்தம் பருப்பை பொடிசெய்து மாவுக்கட்டு போடப்படுகிறது.
       ஆண்களின் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போக்க உளுந்தம் பருப்பின் வடை, பலகாரம் செய்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட விந்தணுக்களின் சக்தி அதிகரிக்கும். 
          

Friday 16 October 2020

காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட / Walking practice

 காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட

                   நடை பயிற்சி 

      காலையில் எழுந்ததும் நட இரவில் தூங்கும் முன் நட என்பது மேற்கத்திய பழமொழி. நடைப்பயிற்சி (walking Practice) ஏன் செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
       நடைப்பயிற்சி செய்யும் போது நூற்றைம்பது கலோரிகள் பயன்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல் பல இரத்தம் நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். 

          காலையில் எழுந்ததும் நடக்க வேண்டும். இரவில் தூங்கும் முன் நடக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். நகர்ப்புறங்களில் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று வருபவர்களைப் பார்த்தீர்களா? 
      இரவு உணவு உண்டவுடனே உறங்கக் கூடாது. இரவு உணவு உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையில் சுமார் மூன்று மணி நேர இடைவெளி இருப்பது  அவசியம். எதற்காக இந்த இடைவெளி என்று சிந்திப்போம். 

உணவு இடைவெளியும் செரிமானமும்

     மனிதன் உறங்கும்போது மூளையும் ஓய்வெடுக்கத் தொடங்கி விடும். மூளை உறங்கி விடுவதால் மற்ற உள்ளுறுப்புகள் ஓய்வெடுக்க வேண்டும். இது இயற்கை நியதி. இரப்பையில் உணவு நிரம்பியவுடன் சீரணக்கருவிகள் ஓய்வெடுக்கச் தொடங்கினால் என்னாகும்.

 
        தேவையான செரிமான நீர் சுரப்பது தடைபடுவதோடு வயிற்றில் அசீரணம் ஏற்படும். எனவே நாம் உண்ட உணவானது முழுமையாகச் செரிக்கமால் புளித்து நாற்றமெடுத்துப் போய்விடும். 
       இந்தப் புளித்த உணவு காலை எழுந்திருக்கும் வரை இரைப்பையில் இருந்து ஒரு விதமான வாயுவை உற்பத்தி செய்யும். 
      இந்த நஞ்சு வாயு இரத்தத்தில் கலந்து உடல் முமுவதும் பரவுகிறது. 

நடை பயிற்சி இல்லாத நிலையில் ஏற்படும் விளைவுகள் 

        இரவு உணவு உண்ட உடனே தூங்கச் செல்பவர்களுக்கு மன, உடல் உபாதைகள் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். 
       இதனால் நடைப்பயிற்சி செய்வதற்கு உடலில் அசதியாகத் தோன்றும். 

                இவர்களால் அதிகாலையில் புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாது. 
           யோகா, தியானம் போன்ற மன அமைதிக்காகச் செய்யும் பயிற்சிகளில் நாட்டம் குறையும். 
            உடலில் வளையும் தன்மை குறைந்து விடும். இதனால் இரத்த ஓட்டம் தடை படும். 
         இரவில் சாப்பிட உடனே படுக்கைக்குச் செல்லும் பலருக்கும் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூக்கடைப்பு, வாய் தூர்நாற்றம் போன்ற தொல்லைகளில் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டேஇருக்கும்.

நடைபயிற்சியின் நன்மைகள் 

        நடைப்பயிற்சி தினமும் காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன் செய்தால் உணவு செரிமானமாகி சுரப்பிகளின் செயல் திறன் அதிகரிக்கும். சர்க்கரை வியாதி தோற்றுவிக்கும் இன்சுலின் ஹார்மோனின் அளவை சமநிலையில் வைக்கும். 

        உடலின் எடையை சரியான உயரத்துக்கு ஏற்ற அளவில் பராமரிக்க உதவும். 
       உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து விடும். பசி உணர்வை தூண்டும். வயிற்றில் அளவோடு சாப்பிட வைக்கும். 
       காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்யும் போதுசிறிதளவு நீர் அருந்தி விட்டு நடந்தால் உடலின் நீர் சமநிலை ஏற்படும். தேவையற்ற அமில காரங்களும் வியர்வையாக வெளியேறும். 

        தினந்தோறும் நடைபயிற்சி செய்வோம்.
        நலமுடன் வாழ்வோம். 

Wednesday 5 August 2020

எண்ணெய் குளியல் பயன்கள் / Oil bathing benefits

    எண்ணெய் குளியல் பயன்கள் 

எண்ணெய் குளியல் 

           நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி என அனைவரும் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால் இன்று எண்ணெய் குளியல் அது என்னவென்று தெரியாமல் மறைந்து விட்டது. 
         எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சில மணிநேரம் கழித்து குளிப்பது தான். தீபாவளி பண்டிகை நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். 
        நம் முன்னோர்கள் தைப்பொங்கல்,  ஆடி மாதம் முதல் நாள் எண்ணெய் குளியல் செய்து வந்தார்கள்.
       தற்போது உள்ள சூழ்நிலை, தொழில் ஆகிய காரணங்களால் நேரமில்லை எனவும், வீண் செலவுகள் என்ற ஆதாரமற்ற கருத்துக்கள் எண்ணி நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த நல்ல பழக்கம் புறக்கணிக்கப் பட்டுள்ளது. 
         உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும், மனமும் இறுகி அசதியாக இருக்கும். 
         ஒவ்வொரு நாளும் இரவு  தூங்கி மறுநாள் உடல் களைப்பு நீங்காமல் விழிக்கிறோம். இதற்குச்சிறந்த தீர்வு காண எண்ணெய் குளியல் உதவும். எண்ணெய் குளியல் குளித்தப்பிறகு உடலும் உள்ளமும் ஓய்வு பெறும். தசைகளும், முகமும் புத்துணர்ச்சி பெறும். 
      எனவே இதை தினமும் செய்ய ஆயுர்வேதம் கூறுகிறது. 

எண்ணெய் குளியல் செய்ய வேண்டிய எண்ணெய் 

       எண்ணெய் குளியல் செய்யப்பெரும்பாலும் 
நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் உடலுக்குக்குளிர்ச்சி தரும். 
        நல்லெண்ணெய் குளிக்கப்பிடிக்கவில்லை என்றால் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

குளிக்கும் முறை 

        தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில்  (4:30 - 6:00) மணிக்குக்குளிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். 
          எண்ணெய் குளியல் பெரும்பாலும் காலை 6.30 - க்குள் தொடங்கி விடுவது நல்லது. வெதுவெதுப்பான வெந்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலைக்குத் தேய்க்க சீயக்காய் பயன் படுத்தலாம். 
      உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளமுடியாமல் போனலும் குளிப்பதற்கு முன்பு தலை, காது, கால் இந்த மூன்று இடங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

          குளிக்கும் முன் உள்ளங்கை, உள்ளங்கால், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிங்கால் சதைப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவது நல்லது.
       தலையில் எண்ணெய் தேய்த்தால் நீர் கோர்த்துக்கொள்ளாது. 
     குளிர்ந்த நீரில் கண்டிப்பாகக் குளிக்க வேண்டாம்.

முன்னோர்கள் பின்பற்றிய கிழமைகள் 

      ஆண்கள் புதன் கிழமை குளித்தால் அறிவும், சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆயுளும் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
    பெண்கள் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வம் பெருகும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
     அவரவர் பிறந்த தினத்தில், கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம் என்றும் முன்னோர்கள் கூறி விட்டு சென்றார்கள். 

குளியல் செய்த அன்று கடைப்பிடிக்க வேண்டியவை 

    எளிமையான உணவுகள் உண்ண வேண்டும்.எண்ணைக் குளியல் செய்த அன்று பகலில் உறங்கக் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்ய வேண்டாம். குளிர்ந்த உணவுகளான ஐஸ்கிரீம், ஐஸ் தவிர்க்க வேண்டும். 

பயன்கள்

               எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். உடலுக்குக்குளிர்ச்சி தரும். உடல் சூட்டைத் தணிப்பதால் உடல் சூட்டில் ஏற்படும் நோய் வராது.
       தோல் வறட்சி நீங்கிவிடும். தோல்பொழிவு பெறும்.
      உடல் நலம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு தொல்லைகள் நீங்கும்.
       நமக்குச்சளி, ஜலதோஷம், மண்டைக்கனம் நீங்கி விடும்.
       தலையில் வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும். மயிர் கால்களில் அழுக்கு தங்குவது, அதிக சூடு போன்றவை நீங்கும்.
     உடலின் பாரத்தைத் தாங்குவது எலும்புகள் மற்றும் பாதங்கள். இந்தப் பகுதியில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பான நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கண் பார்வைத் திறன் மேம்படும். முக பொலிவு பெற Read more
     எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்!
முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்லவைகளைப் பின்பற்றுவோம்!

Tuesday 28 July 2020

விக்கல் நிற்க / stop vikkal tips

விக்கல் நிற்க /  STOP vikkal tips

விக்கல்

விக்கல் நமக்கு சௌகரியமானதாக இருக்காது. விக்கல் வந்தால் சிக்கல் என சிலர் நினைப்பார். விக்கல் ஒரு தனி நோய் என சித்த மருத்துவம் கூறுகிறது. வயிறு செரிமானம் இல்லாமல் இருந்தால் விக்கல் வரும். 
             அவசரமாகக் கெட்டியான உணவுப் பொருளை உண்பதால்  விக்கல் வரும். அதிகக்காரம், இனிப்பு, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், வயிற்றில் காற்று சேர்ந்தாலும், வயிறு புண்பட்டிருந்தாலும் விக்கல்வரும். 

விக்கல் நிற்க

         சிலருக்கு விக்கல் தண்ணீர் அல்லது வெந்நீர் குடிக்க நின்று விடும். சிலருக்கு இவை எதிலும் சரியாகாமல் நாள் கணக்கில் விக்கல் தொடர்வது உண்டு. 
                பால்குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி விக்கல் உண்டாகும். இதை குழந்தைகளுக்கு வயிறு பெருக்கிறது என்று சொல்வார்கள். 

விக்கல் பழமொழி

                 "விக்கல் கண்டால் ஏக்கம் 
                 வீக்கம் கண்டால் தூக்கம் "
என்பது பழமொழி. விக்கல் நண்பணுக்கு எடுத்தால் உடனே உன்னை யாரோநினைகிறார்கள் என்று பேசி கிண்டல் செய்த விளையாட்டு அனைவருக்கும் நினைவு இருக்கும்.
          நான் இங்கு சொல்லும் கருத்துக்கள் சித்த மருத்துவர் கூறிய செய்தி. 
          

விக்கல் நிற்க ஆலோசனை 

அரை டம்ளர் தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட விக்கல் விடும். 
நான்கு ஏலக்காய் விதைகளைத் தூளாக்கி வெற்றிலைக்குள் வைத்துத் தின்று விட விக்கல் நிற்கும். 
சிறிதளவு பெருங்காயம் எடுத்து பொரித்துத் தண்ணீர் அல்லது மோரில் குடிக்க விக்கல் தணியும். 
சிறிய சுக்கு, அச்சு வெல்லம் இரண்டையும் அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் கொண்டு வாயில் அடக்கிச்சாற்றை மட்டும் விழுங்கி விட, விக்கல் தீரும். 
ஒரு பிடி நெற்பொரியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் விடும். பால்  பிடிக்காதவர்கள்  தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விக்கல் தீரும். 
வல்லாரை இலையை அரைத்து அரைக் கோப்பைச்சாற்றை எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர விக்கல் நிற்கும். 
விரலி மஞ்சளைச் சுட்டு அது எரியும் போது அணைத்து அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சினால் விக்கல் சரியாகும். 
சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். உணவே மருந்து, மாத்திரைகள் உண்பதை குறைப்போம்.
விலக்கல் நிற்க...
   இந்தப்  புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம்.

Thursday 25 June 2020

How to get deep sleep ஆழ்ந்த தூக்கம் வர

         உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும். ஆனால் தூக்கம் வரவில்லை என்றால் நிம்மதியாக வாழ வாய்ப்பில்லை. எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. கண் எரிச்சலாக இருக்கு டாக்டர். தூக்க மாத்திரை கொடுங்க என வாங்கி விழுங்கும் சிலர் உள்ளனர். இரவு தூக்கம் ஒரு நாள் கெட்டால் ஐந்து நாளைக்கு அலுப்பு இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வது உண்டு. 
        இன்றைய இளைஞர்கள் இரவு தூக்கத்தை பறித்து விடுகிறது mobile phone. இன்று சரியான நேரத்தில் தூங்க செல்பவர்கள் மிக குறைவு. நீங்களும், நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆழந்த தூக்கத்தை பெற வேண்டுமா? இதைப்படிங்கள்.
       இரவில் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் எந்த வேலையையும் செய்யமாட்டேன் தூங்க சென்று விடுவேன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இரவு பத்து மணிக்கு மேல் தூங்க வில்லை என்றால் வரும் உடல் உபாதைகள் எண்ணி விருப்பப்படி தூங்க செல்ல வேண்டும். 
           மனிதன் பழக்கத்திற்கு அடிமை. எனவே நம்மை நாமே பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும் என பல மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். தூங்க செல்ல சரியான நேரம் எது? என்று கேட்டால் இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரை இளமை ஹார்மோன் சுரக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இரவு பத்து மணி முதல் காலை இரண்டு மணி வரை தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக வரும். 
           இரவு தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அலை பேசி, மடிக்கணினி, கணினி  பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த சாதனங்களில் உள்ள blue light waves உங்கள் கண்களிலும் , உங்கள் தோலிலும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் சுரப்பிகள் சுரப்பதை தடுக்கும். என்னால் cell phone, laptop, computer பயன்படுத்தாமல் இருக்க முடிய வில்லை எனில் உங்கள் சாதனத்தில் உள்ள blue light mode off செய்து விடலாம். அதற்கு நிறைய அப்ளிக்கேஷன் வந்து உள்ளது. அதைப் பயன்படுத்தி blue light mode off செய்து விட்டு பயன்படுத்தினால் தூங்கச்செல்லும் போதுஆழ்ந்த தூக்கம் வரும். 
        தொலைக்கட்சியை தூங்கச்செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் பார்ப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
       சிலர் தூங்கும் அறையில் லைட் போட்டுக்கொண்டு தூங்குவது வழக்கம். இது கண்டிப்பாக தவறான ஒன்று. சிலர் கண்களைக் கறுப்பு துணி கட்டிக் கொண்டு தூங்குவார்.நான் தான் வெளிச்சத்தை பார்க்க வில்லை என்றால் உங்கள் தோலில் வெளிச்சம்  படுகிறது எனவே ஆழ்ந்த தூக்கம் வராது. கண்களுக்கும், தோலுக்கும் நிறைய தொடர்பு உண்டு. இரண்டிலும் வெளிச்சம் படவில்லை என்றால் மட்டும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் சுரக்கும். என்னால் இருட்டறையில் தூங்க முடியாது என்றால் அந்த அறையில்  blue colour light தவிர்த்து red, yellow colour light யை சிறிய லைட்டாக  பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். 
        இரவில் தூங்குவதற்கு முன் வெந்நீரில் குளிக்க உடலில் வெப்பநிலை சமநிலை அடைய முயற்சிக்கும். ஆழ்ந்த தூக்கம் வரும். படுக்கையில் குறைந்த அளவு ஆடைகளை அணிந்து கொண்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு குறைவு. Night dress பயன்படுத்த வேண்டும். 
                      ஜீன்ஸ், லெக்கீன்ஸ் போன்ற இருக்கமானஆடை அணிவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உங்கள் தூக்கத்திற்கு தடையாக இருக்கும். அமெரிக்காவில் தூக்க பிரச்சனை உள்ள பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் சராசரியாக தூங்கும் போது அவர்கள் அணிந்திருந்த ஆடையால் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைவாக ஆடையை அணிந்து தூங்க பரிந்துரைகள் செய்தனர். ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்துள்ளதைக் கண்டறிந்தனர். ஆகவே இரவில் இருக்கமானஆடை அணிவதைத் தவிர்த்தல் மூலம் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 
           இரவில் ஆழ்ந்த தூக்கம் வரவேண்டும் என்றால் மதியம் இரண்டு மணிக்கு மேல் காபியை பருகக்கூடாது. அதில் உள்ள ஹாபின் என்ற வேதிப்பொருள் ஆழ்ந்த தூக்கம் வர உதவும் ஹார்மோன் சுரப்பதை தவிர்க்கும். எனவே மதியம் இரண்டு மணிக்கு மேல் காப்பிக்கு டாட்டா சொல்லிவிடுங்கள். 
       இரவில் ஆழ்ந்து தூங்க வேண்டுமானால் தூங்கச்செல்லும் முன் பால் பருக வேண்டும்.
பாலில் தூக்கத்தைத் தூண்டக்கூடிய டிரைப்டோபான் என்ற அமிலச்சத்து உள்ளதால் தூக்கத்தைத் தூண்டும். 
        இரவில் மது குடித்து விட்டு தூங்குவது மயக்கத்தை ஏற்படுத்துமே தவிர ஆழ்ந்த தூக்கத்தை தராது. படுக்கைக்கு செல்லும் முன் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை தவிர்த்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். 
     இரவு  இலேசான உணவை உட்கொள்ள வேண்டும். அதிகமான கொழுப்புச்சத்து உள்ள இறைச்சியை இரவு உணவாக சாப்பிட்டால் இரவு தூக்கம் கெட்டுவிடும். 
        இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு இரவு முழுவதும் 'ஓவர்டைம் ' வேலை செய்வதால் தூக்கம் கெட்டுப் போய்விடும். 
         இரவில் செரிமானப்பிரச்சனை உள்ள உணவுகளான கீரை, தயிர், ஊறுகாய் தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவையாக உள்ள ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தூங்கச்செல்லும் முன் சாப்பிடுவதைத் தவிர்த்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் ஆழந்த தூக்கம் வரும். 
         பகலில் தூக்கத்தைத்தவிர்க்க வேண்டும். முடியவில்லை என்றால் பகல் தூக்கம் அரை மணி நேரத்திற்கு மிகாமல் தூங்கி வந்தால் இரவில் ஆழந்த தூக்கம் வரும். 
       தூங்கும் இடத்தை  ( bed) கட்டில் அல்லது மெத்தையின் மீது அமர்ந்து கொண்டு அலை பேசி, மடிக்கணினி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அந்த பகுதியை படுக்கையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் படுக்கும் இடத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் தான் அலைபேசி வைக்க வேண்டும். அப்போதுதான் அலைபேசியின் கதிர்வீச்சு உங்கள் மூளையைத் தாக்குதல் நடத்தாமல் ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். Bed is only for sleeping என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் ஆழ்ந்த தூக்கம் வரும். 
            இரவு உணவு உண்ட உடனே தூங்கச் செல்லக்கூடாது. சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தபின் தூங்கலாம். தூக்கம் தானே வரும். இரவு உணவை சாப்பிட்டு விட்டு குடும்ப உறுப்பினர்களிடம் பேசி இன்று நடந்த செயலைக் கூறி நாளை என்னச்செய்வது எனக் கலந்துரையாடல் செய்து பின் தூங்கலாம். 
             இரவு உணவை இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டு விட்டு  பின்னர் ஒரு மணிநேரம் கழித்து உறங்கச் சென்றால். உணவும் செரிமானம் ஆகிவிடும். ஆழ்ந்த தூக்கம் வரும். 
       இரவு தூக்கத்திற்கு செல்லும் முன் டைரி எழுதும் போது  உடல் சோர்வாகி தூக்கத்தை வரவழைக்கும். இதே போல் தான் நூல்கள் படிக்கும் போது உடலில் களைப்பு ஏற்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும். 
           ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமென்றால் தூங்கச்செல்லும் முன் தியானம், ஜபம், கடவுளை மனதில் நினைத்து அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் போன்றவை செய்யலாம். மிக முக்கியமாக மூச்சுப் பயிற்சியும்  செய்யலாம். 
            இதைக் கடைபிடித்தால் ஒவ்வொரு இரவிலும் ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக வரும். நல்லத் தூக்கம் தான் அனைத்து நோய்க்கும் மருந்து. 
ஆழ்ந்த தூக்கத்தைப்பெறுவோம்!
அனைத்து நோயையும் விரட்டுவோம்!!
          

Saturday 13 June 2020

நலமுடன் வாழ பத்து ...Top ten health tips.

      நாம் எவ்வளவு எண்ணெயை உணவாக மாதம் பயன்படுத்தலாம்? 
          ஒருவருக்கு மாதந்தோறும் 500 மில்லி லிட்டர் மிகாமல் எண்ணெயை உணவாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் இரண்டு லிட்டர் எண்ணெய் பயன்படுத்தலாம். அந்த எண்ணெய் ஒரே வகையாக இல்லாமல் நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், பாமாயில், தேங்காய் எண்ணெய் என்று பயன்படுத்த வேண்டும் 
         
  அயோடின் உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் நன்மைகள் என்ன?
அயோடின் பற்றாக்குறையினால் தைராய்டு சுரப்பி வீங்கும். இதனால் கழுத்துக்குக் கீழ் கட்டி போல்உருவாகும். இதற்கு முன் கழுத்துக்கழலை என்று பெயர். தைராய்டு சுரப்பி உடம்பின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதன் குறைவு உடல் பருமனையும் மந்த தன்மையையும் உண்டு பண்ணும். இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்குக்குறை பிரசவம், குழந்தை முழு வளர்ச்சியின்றி பிறப்பதும் நிகழும். வளரும் பருவமாக இருந்தால் மூளை வளர்ச்சியில்லா குழந்தையாக இருக்கும். இவைகளை போக்குவதற்கு அயோடின் சேர்த்து கொள்ள வேண்டும். இது சாதாரண கல் உப்பில் உள்ளது. 
சர்க்கரை வியாதிக்காரர்கள் எந்த மாதிரி உணவை உட்கொள்ளக்கூடாது?
இனிப்பு வகைகள், சர்க்கரை, தேன், சர்பத், ஜெல்லி, பழரசம், உருளைக்கிழங்கு, பீட்ரூட் எல்லா வித கொழுப்பு உணவுகள், நெய், வெண்ணெய் முதலானவைகளை உண்ண கூடாது. மாம்பழம், வாழைப்பழம் முதலான பழங்களை உண்ண கூடாது. 
குறைந்தபட்சம் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? 
ஆரோக்கியமான வாழ்வுக்கு மனிதன் தினந்தோறும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி தண்ணீர் பருக வேண்டும். வெளியேறும் சிறுநீரின் அளவும் அதே அளவில் இருக்க வேண்டும். சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 
காலை உணவு சாப்பிட வேண்டிய நேரம் எது? 
காலை உணவைக்காலை எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 
மதிய உணவு எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? 
 நண்பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. 
 இரவு உணவு எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? 
   மாலை  ஆறு மணி முதல் இரவு பத்து மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுங்கள். இரவு பத்து மணிக்குப் பிறகும் சாப்பிடாமல் இருந்தால் அமிலம் அதிகம் சுரந்து குடலில் கோளாறு ஏற்படும். 
இரவில் தயிர், கீரை சேர்த்து சாப்பிடலாமா? 
தயிர்  போன்ற நொதிக்கும் தன்மையுடைய பொருள்களை இரவில் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டது. ஏனெனில் ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். எனவே கீரை, தயிர், ஊறுகாய் போன்ற உணவை இரவில் சாப்பிட வேண்டாம். 
சாப்பிடும் டீயில் தேன் சேர்ப்பது நல்லதா? 
டீயுடன் தேனை சேர்த்து கொதிக்க வைக்ககூடாது. சூடான டீயுடன் தேனைச் சேர்த்துக் கலந்து குடித்தால் உடம்பிற்கு நல்லது. 
படர்ந்த கொடிகளில் விளையும் காய்கறிகள் உடலுக்கு நல்லதா? 
பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் சாப்பிட உடலிலிருந்து அதிகமாகச்சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க இதைச்சாப்பிடலாம். 
டீயுடன் வெல்லம் சேர்க்கலாமா? 
டீயுடன் வெல்லம் சேர்த்து பருகலாம். வெள்ளை சீனி சேர்ப்பது உடல் நலத்திற்கு தீங்கைத்தரும். 
உணவை உரிய நேரத்தில் உண்போம்  !!
உடல் நலத்துடன் வாழ்வோம்   !!!

Wednesday 10 June 2020

முகம் பொலிவு பெற வேண்டுமா?/Face beauty tips

           முகம் பொலிவு பெற வேண்டுமா? 

முக அழகு

             நம் முகம்  அழகாக இருக்க வேண்டும் என சிறுவர் முதல் பெரியவர் வரை நினைக்கிறார்கள். முகம் அழகு பெற பேசியல் செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.

         முகம் அழகாக இருந்தால் தன்னிடம் ஒரு கெத்து இருக்கும். நானும் சரி நீங்களும் சரி முகம் பொலிவு பெற விரும்புவது உண்டு. உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளதன்முகத்தை பொலிவுடன் வைக்க பல டிப்ஸ் இருக்கும். அதில் சிலவற்றை மட்டும் செய்முறை விளக்கம் விளக்கம் அளித்துள்ளேன். 
     ஆசையாய் ,அன்பாக வரி விடாமல் படிக்கும் வாசகர்கள் இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முகம் ஏன் அழகாக இருக்க வேண்டும்? இது பற்றி யோசித்து கொண்டு இருங்கள். 


வாழைப்பழம் &சீனி

ஒரு வாழைப்பழம் தோலைஉரித்து சதைப்பகுதி பவுலில் எடுத்து கொள்ளுங்கள். அதற்கு சமமான அளவில் இரண்டு டேபிள் ஸ்பூன் சீனி  ( வெள்ளை சர்க்கரை ) எடுக்க வேண்டும். இரண்டையும் கலந்து மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். முகத்தை நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துவிடுங்கள். பின்பு வாழைப்பழம் சீனி கலவை முகத்தில் தடவி மேல் நோக்கி முகம் இருக்குமாறு வைக்கவும். பிறகு ஒரு மணிநேரம் வரை உலர விடுங்கள். முகத்தை நீர் வைத்து கழுவ வேண்டும். இப்போதுஉங்கள் முகம் பளிச்சென்று இருக்கும். இது எளிய முறை பேசியல் டிப்ஸ். வீட்டில் இருந்தே குறைந்த செலவில் செய்யலாம்

 அடிக்கடி உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகசோர்வு நீங்கிவிடும். ஒரு நாளில் பத்து முறையேனும் நீரில் கழுவி சுத்தம் செய்து வாருங்கள். 
  அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் செய்யும் அற்புதமான டிப்ஸ் இதோ. 

முகப்பொலிவு டிப்ஸ் 

          சோற்றுக்கற்றாழை சிறிய தண்டு பகுதியை செடியில் இருந்து எடுத்து கொள்ளுங்கள். 
               மேல் உள்ள தோலைஉரித்து உள்ளே இருக்கிற ஐஸ் போன்ற ஜெல்லி பகுதியை எடுத்து கட்டி தயிரை கலக்கி முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீர் வைத்து முகத்தை கழுவிவிடுங்கள். 
                     உங்கள் முகத்தை பார்த்து உங்களுக்குஒரு ஆச்சரியம் ஏற்படும். 
முல்தானி மட்டி &ரோஸ்வாட்டர்
          சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் முல்தானி மட்டியை  வாங்கி வையுங்கள். சந்தனக்கடையில் ரோஸ்வாட்டர் கிடைக்கும். கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர், இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து பேஸ்ட் போன்ற நிலை வந்து உடன் முகத்தில் மென்மையாக தடவுங்கள். உங்கள் முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 

முகப்பரு நீங்க 

முகப்பருவிற்கு அகத்திக்கீரை இலையை தண்ணீர் விடாமல் சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து பருவின் மேல் போடவும் . சில தினங்களாக இப்படி செய்தால் பருக்கள் மறையும். 
முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் இருக்கிறதா?அப்படி என்றால் உடனே வெதுவெதுப்பான அரிசிக்கஞ்சியை இரவில் தடவிக் கொள்ளுங்கள். காலை எழுந்து நீரில் கழுவினால் பருக்கள் விரைவில் மறையும். 
                          பாதாம் பருப்பை தோலைஉரித்து நன்றாக அரைத்து முட்டை  வெள்ளைக்கருவையும் சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டு கலந்து முகத்தில் தடவி முகம் காய்ந்த பின்பு கழுவி வந்தால் முகத்தில் பருக்கள் நீங்கும். 

முகத்தில் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையம் நீங்க . . . 

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டகூடாது. இந்த தக்காளி பேஸ்ட் முகத்தில் மென்மையாக கண்களைச்சுற்றி கண்களைமூடிக் கொண்டு பூசி உலர வைத்து குளிர் நீரில் கழுவி வந்தால் கண்கருவளையம் மறையும். 

  உருளைக்கிழங்கு சிப்ஸ் போல்  வட்டமாக வெட்டி முகத்தில் ஒட்டி பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். முகத்தின் அழகு கூடும். 
          வெள்ளரிக்காய் வட்ட வடிவில் வெட்டி முகம் முழுவதும் மூடி சில மணித்துளிகள் கழித்து நீரில் கழுவவும். இருப்பினும் இரவில் ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை நன்றாக தூங்குவது முக பொலிவை அதிகரிக்கும். இரவு வேளையில் வேலை செய்யும் பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள். 
"முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள். 
முகப்பொலிவுடன் வாழுங்கள் "