H

Monday 15 June 2020

வள்ளலார் கதை / Vallalar story

            வள்ளலார் கதை/ Vallalar story

                  "அருட்பெருஞ்ஜோதி தனிபெறும் கருணை" என்ற வாசகத்தை உலக அறிய செய்த உத்தமர் வள்ளலார் வாழ்ந்தக் காலத்தில் நடந்தச் சம்பவம்பற்றி 'வள்ளலார் கதை' என்ற தலைப்பில் வாசகர்களுக்குப்பதிவு செய்வதில் எனக்கு மற்ற மகிழ்ச்சி. இது என் மனம் கவர்ந்த பதிவு.

திருடனுக்கு கடுக்கன் கொடுத்தவர்:

                         திருடனை நாம் பார்த்தாலே முதலில் பயம் வந்து விடும். கைகள் உதறும். கால்கள் இழுத்து தள்ளும். என்ன செய்வது என்று யோசிக்க மூளை சிறிது நேரம் தடுமாறும். திருடன் நம்மைக்கத்தி வைத்துக் குத்தி விடுவனோ, என்ற பயமும் பற்றி விடும். 
                                             அப்படி  இருக்க திருடனுக்குக் கடுக்கன் கழற்றி கொடுத்தவர் யார்? திருடனுக்கும்  திருந்த வழிச்சொல்லி திருடனைத்திருத்தியவர் யார்? யோசியுங்கள் நண்பர்களே,
                                  முன்பு ஒரு காலத்தில் நடந்தச் சம்பவத்தைக் கதை வடிவில் உங்களுக்காகப் பதிவு செய்துள்ளேன்.

வள்ளலாரை மனிதன் என்று சொன்னவன்:

          தெருவில் போவோர் வருவோரை யெல்லம். அதோ போகிறது கழுதை, இதோ வருகிறது நாய் என்று வந்த படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் ஒரு பித்தன்.
           அந்த வழியாக ராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார் வந்துக் கொண்டிருந்தார். 
அதைக் கண்ட சிலர் அவர்மீது அக்கறைக் கொண்டு, "சுவாமி! அந்தப்பக்கம் போகாதீங்க...!அங்கு இருக்கிற பித்தன் ஒருவன் போவோர் வருவோரை வாய்க்கு வந்தபடி பேசித்திட்டிக் கொண்டிருக்கிறான். "உங்களையும் என்று சொல்லித்தடுக்கப் பார்த்தனர். 
                                                    என்னை எப்படி வேண்டுமானாலும்  திட்டட்டும். அதைப் பற்றி எனக்குக்கவலை இல்லை. என்மீது அக்கறை கொண்ட நீங்களும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நடந்தார். 
                         வள்ளலாரைப் பார்த்தவுடன், "இதோவருகிறார் மனிதன் " என்றுச் சொன்ன பித்தன் திண்ணையிலிருந்து எழுந்து நிர்வாணத்துடன் ஓட ஆயத்தமானான். 
வள்ளலார் அவனுக்கு ஒரு துணியைக் கொடுத்து உடுத்திக் கொண்டு போகும்படி செய்தார். 

வள்ளலாரும் திருடனும்:

            அப்படிப்பட்ட வள்ளலார் ஒரு நாள் இரவு. திருவொற்றியூரில் உள்ள கோவில். திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஒரேபக்கத்தில் ஒருக்களித்துப்படுத்திருந்தால் ஒரு பக்கக் காதில் அணிந்திருந்த கடுக்கன் மின்னிக் கொண்டிருந்தது. 
                  அந்த வழியே வந்த திருடனுக்கு 'அது' பளிச்சென்று தெரிந்தது. அக்கடுக்கனைக் கழற்றினான். அதை வள்ளலார் உணர்ந்தார். ஆனால் கத்தவோ, கதறவோ, எதிர்ப்புக்குரல் கொடுக்கவோ இல்லை, அமைதியாயிருந்தார். 
              "நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக்காட்ட வேண்டும்" என்று இயேசு பிரான் சொன்னது போன்று.
ஒரு கடுக்கனைக் கழற்றியத் திருடனுக்கு மறுக் கடுக்கனையும் கழற்றிக் கொடுக்க வேண்டும் என்ற பாணியில் திரும்பி மறு புறத்தில் ஒருக்களித்துப்படுத்தார். 

திருடனைத்திருத்திய வள்ளலார்:

                  திருடன்  யோசிக்க ஆரம்பித்தான். சாதாரண மனிதனாக இருந்தால் இந்நேரம் 'திருடன், திருடன்' எனக் கத்தி ஊரைக் கூட்டி நம்மைப் பிடிக்கச் செய்து அடி உதைகளைக் கொடுக்கச் செய்திருப்பாரே.  இவரோஒரு கடுக்கனுக்குப்பதிலாக இரு கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்த தெய்வம். 
               இத்தகைய தெய்வத்திடம் மன்னிப்பு கேட்பதேயன்றி, வேறு வழியில்லை என்று மனம் திருந்தினான். சுவாமி, வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டிச் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிக் காலில் விழுந்தான். 
           

      வள்ளலார் திருடனுக்குச் சொன்ன உபதேசம்:

             

                     எழுந்திரு தம்பி! நீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்ணாசை, மண்ணாசை, பொருளாசை வென்ற துறவிக்குப்பொன்னாசை எதற்கு?  பொன்நகைகளுக்கு பதிலாகப் புன்னகை மட்டும் தானே தேவை! என்பதனை புரிய வைத்தவன் நீ ஆதலால் இந்தக் கடுக்கனையும்நீயே எடுத்துக்கொள் என்றால் வள்ளலார். 

வள்ளலாரும்  கர்ணனின் கொடை:

                 இருந்தவைகளையெல்லாம் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கர்ணன் கடைசியில் குண்டலங்களையும் கொடுத்ததுபோல வள்ளலாரும் கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்தார். "எதைக்கொண்டு வந்தோம் இழப்பதற்கு நீ எதை இழந்தாலும் இன்னும் எதிர் காலம் இருக்கிறது." என்றத் தன்னம்பிக்கை உடன் வேறு பதிவில் சந்திப்போம்!!!
       வள்ளலார் பற்றிப் படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம்
     
 இந்தப்படத்தின் மீது தொட்டுச்சரிபார்க்கலாம்.