H
Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Wednesday 29 July 2020

கடையேழு வள்ளல்கள் / Top seven vallal

  கடையேழு வள்ளல்கள் /  Top seven vallal

வள்ளல்கள் வரலாறு

      பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழர்களின் கல்வி நிலைமை,  வாழ்க்கை முறை, தமிழ் புலவர்களின் நிலை, மன்னர்களின் ஆட்சி முறையை அறிய செய்வது சங்க நூல்கள் தான். சங்க நூல்களில் சிறந்தது புறநானூறு. இந்தப் புறநானூற்றில் கடையேழு வள்ளல்கள் பற்றிய தகவல் உள்ளது. கடையேழு வள்ளல்கள் பற்றி படிக்கலாம்.

கடையேழு வள்ளல் - பேகன்

         பழநி என்று அழைக்கப்படும் ஆவிநன் குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவன் பேகன். மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்தியவன்.
         கபிலர், பரணர், பெருங்குன்னூர் கிழார், அரிசில் கிழார் போன்றப் புலவர்களை ஆதரித்தவன்.

கடையேழு வள்ளல் - நள்ளி 

        மதுரைக்குத் தெற்கே உள்ள தோட்டி மலைப்பகுதியான கண்டீர நாட்டின் அரசன். கண்டீரக்கோ என்று நள்ளியை அழைப்பார்கள். வன்பரணர் பெருந்தலைச் சாத்தன் போன்ற புலவர்களால் போற்றப்பட்டவன்.

கடையேழு வள்ளல் - ஓரி

      கொல்லிமலையை ஆண்ட அரசன் தான் ஓரி. கொல்லிமலை அரசன், வல்வில் ஓரி என்றும் அழைக்கப்பட்டார். தான் எய்த ஒரே அம்பில் யானை, புலி, மான், பன்றி மற்றும் உடும்பை மாய்த்தவன். கபிலர், பரணர், கழைதின் யானையார், நல்லர்நத்தத்தனார் பெருஞ்சித்திரனார், போன்றோரால் பாராட்டப்பட்டவன்.

கடையேழு வள்ளல் - காரி

       திருக்கோவிலுரைத் தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்தவன் காரி. வட வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், நப்பகலையாரல் போன்ற புலவர்களால் பாடப் பெற்றவன். 
              இதற்கு முன்பு திருக்கோவிலுர் விழுப்புரம் மாவட்டத்தில்இருந்து வந்தது. தற்சமயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.

கடையேழு வள்ளல் - ஆய்

     பொதியமலைப் பகுதி ஆண்டவன் ஆய். ஆய் ஆண்டிரன் வேள்ஆய் எனப்போற்றப்பட்டவன். முட மோசியார், ஒடைக்கிழார் போன்றப் புலவர்களை ஆதரித்தவன்.

கடையேழு வள்ளல் - அதியமான் 

       அதியமான் தருமபுரி  (தகடூர்) பகுதியை ஆண்டவன்.  இந்தப்பகுதி முன்பு சேலம் மாவட்டத்துடன் இணைந்து இருந்தது.
        அதியமான் ஆட்சியில் குதிரை மலை சிறந்து விளங்கியது. அஞ்சி என அழைக்கப்பட்டவன். அதியமான் தன் தாய் மொழியாகிய தமிழ் மீதும் அம்மொழிப்புலமை உடைய புலவரிடத்தும் நிறைந்த மதிப்பு கொண்டிருந்தான்.
              அதியமான் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு மலையின் பிளவில் கரு நெல்லிக்கனி ஒன்றைக் கண்டான். அக்கனி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை உண்டவர் நெடுநாள் நோயின்றி வாழலாம். அதியமான் அக்கனியை அரிதின் முயன்று பறித்தான். அந்தக் கனியை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பினான்.
        தனது இருப்பிடம் சென்று இந்தக் கனியை யாருக்கு வழங்குவது எனச் சிந்தித்தான். ஔவையார் இந்தக் கனியை உண்டு நீண்ட நாள் இருப்பின் என்னைப் போன்ற அரசர்களை நன்முறையில் நடத்துவார்.
                     ஆதலால் நெல்லிக்கனியின் பெருமையைக் கூறினால் அக்கனியை உண்ணமாட்டார் என உணர்ந்து  அற்புத நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கியவன் அதியமான். ஔவைக்கு அரிய நெல்லிக்கனி கொடுத்த அதியமான் என எல்லோராலும் அறியப்பட்டவர்.

கடையேழு வள்ளல் - பாரி

     பிரான்மலை  (பறம்புமலை) பகுதியை ஆண்டவன். பறம்பு நாடு பாண்டிய நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த மலையில் சந்தனம், வேங்கை மரங்கள் மிகுந்தன. ஆகவே வாழ்ந்த மக்கள் விறகுக்காகச் சந்தனக் கட்டைகளைப் பயன்படுத்தினார்கள்.
       வள்ளல் பாரிக்கு அங்கவை, சங்கவை என இரு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் தமிழில் கவி பாடும் புலமை பெற்று இருந்தார்கள். கனகத்தின் நடுவிலே முல்லைக்கொடி பற்றற்று அசைவதைக் கண்டு மனம் தாங்கமல் முல்லைக்குத் தேர் ஈந்தவன். கபிலர் என்ற புலவரிடம் மிகுந்த நட்புக் கொண்டவர். பாரி வள்ளல் வாழ்வில் நடந்த சுவையான தகவல்கள் படிக்கRead more
     

Monday 27 July 2020

Abdul kalam July 27

  Abdul Kalam July 27

அப்துல் கலாம் கல்லூரி வாழ்க்கை 

        விமானியாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நூலிழையில் தவறிப் போனலும் விதி அவரை உலகம் போற்றும் விஞ்ஞானியாக்கியது.
      எப்படியும் விமானியாக வேண்டும் என்பதே அப்துல் கலாமின் விருப்பம். இதற்காக விமானத் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என நினைத்தார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  (M.I.T) சேர நினைத்துக் கொண்டிருந்தார்.

சகோதரி செய்த தியாகம் 

        சென்னை M.I.T யில் சேர அட்மிஷனுக்கு ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அப்துல் கலாமின் தந்தையிடம் ஆயிரம் ரூபாய் பணம் இல்லை. எனவே கலாமின் கனவு கானல் நீராகும் நிலை உருவானது. 
         அந்த நேரத்தில் கலாமின் சகோதரி சோக்ர உதவ முன் வந்தார். ஆனால் அவரிடமும் பணமாக இல்லை. இருப்பினும் தனது கையில் அணிந்திருந்த தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலியையும் அடகு வைத்துக் கலாம் இடம் பணமாகத் தந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அட்மிஷன்கட்டணத்தைக் கட்டினார் கலாம். 

 அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள்

           அப்துல் கலாம் அவர்கள் எழுதியுள்ள 'அக்னிச்சிறகுகள்' என்ற புத்தகத்தில் உணர்ச்சி ததும்ப சகோதரி செய்த தியாகத்தைக் கூறியுள்ளார். 'எனது படிப்புக்காக எனது சகோதரி செய்த தியாகம் என்மனதைஉருக வைக்கிறது. எனது திறமைமீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்னை மேலும் ஊக்கப்படுத்தியது" என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 

அப்துல்கலாம் பணியைத் தேர்வு செய்தல் 

       அப்துல் கலாம் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கல்வி பயின்று வெளியே வந்தார். இரண்டு வேலைகள் அவருக்கு ரெடியாக இருந்தது.
         எதைத்தேர்ந்தெடுப்பது என்று குழம்பினார் கலாம். தனது பிறவி விருப்பமான விமானப்படையில் சேர்ந்து விண்ணில் பறப்பதா? அல்லது பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புப் பிரிவில் சேருவதா? இரண்டிலும் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கலாமுக்கு தோன்றியது.
      குழப்பமான மனதுடன் இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்பம் செய்தார். சொல்லிவைதாற் போல் இரண்டு நிறுவனங்கள்
இடமிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. 
        விமானப் படை வேலைக்கு டேராடூன் செல்ல வேண்டும். பாதுகாப்புத் துறை வேலைக்கு டெல்லி செல்ல வேண்டும். 

அப்துல்கலாம் அவர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வு 

      பாதுகாப்புத் துறை நேர்முகத் தேர்வு பெரிய அளவில் சவால் எதுவும் இல்லை. பாதுகாப்புத் துறை நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது.
         அதேசமயம் டேராடூனில் பெரிய சவால் காத்திருந்தது. பொதுவாக விமானப் படையில் அறிவுப்பூர்வமான வினாக்களுடன், உடல் தகுதியும் மதிப்பிடப்படும். உடல் தகுதி இல்லை என்றால் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாது. ஆனால் எப்படியும் வெற்றி பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார். 

நேர்முகத் தேர்வு முடிவு 

      டேராடூனில் நடைபெற்ற விமானப்படை பணியின் நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் இருபத்தைந்து  (25) பேர் அழைக்கப்பட்டனர். ஆனால் அந்தப்பணிக்கு எட்டுப் பேரைத் தேர்வுச்செய்தனர். ஆனால் அப்துல் கலாமின் துரதிர்ஷ்டம் ஒன்பதாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
    நூலிழையில் அப்துல்கலாம் அவர்களின் வாய்ப்பு கைநழுவிப் போனது. அந்த ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் டேராடூனில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரிஷிகேஷ் சென்றார். 

அப்துல்கலாமிற்கு ஆறுதல் சொன்னவர்

          ரிஷிகேஷ் சென்று கங்கையில் குளித்து விட்டு சுவாமி சிவானந்தாவை சந்தித்தார்.
          'உன்னுடைய தலைவிதி முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது. உனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. விமானியாக முடியாது என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வாழ்வில் ஒவ்வொன்றும் முன்னதாகவே முடிவான ஒன்று. எனவே இதைக் கண்டு வருத்தப்பட வேண்டாம். ஆனால் உனது பாதை எது என்று நான் இப்போது கூற முடியாது. நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் செல். வெற்றி கிடைக்கும்." என்று அப்துல் கலாமிற்கு ஆறுதல் கூறினார். 

பாதுகாப்புத்துறையில் பணிக்குச்சேர்தல்

    அப்துல்கலாம் விமானியாகும்கனவை விட்டு விட்டு நேராக டெல்லி சென்றார். பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். 
      உலகம் போற்றும் விஞ்ஞானியாகப் பிரகாசித்தார். இன்றைய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி கனவுக் காணுங்கள் என்று கூறினார்.

அப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை  27

          அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உயரிய பதவியான குடியரசுத் தலைவராக இருந்தார். குடியரசுத் தலைவர் பதவியை விட நான் ஆசிரியர் பணி செய்ததே  எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
        இந்தியாவின் அறிவியல் விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர். அப்துல்கலாம் அவர்கள்  2015 ஆம் ஆண்டு சூலை திங்கள்  27  ஆம் தேதி இம்மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 27 ஆம் தேதி அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் நினைவு கூறுகிறோம். 
        அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகம் மீீது தொட்டுப்படிக்கலாம். தள்ளுபடி விலையில் கிடைக்கும்.