H
Showing posts with label Management. Show all posts
Showing posts with label Management. Show all posts

Tuesday 14 July 2020

Human's dress / மனிதனின் ஆடை

      Human's dress / மனிதனின் ஆடை

  மனிதனின் ஆடை மாறும் சம்பவம்:

   எனக்குத் தெரிந்த பிரமுகர் வீட்டில் நடக்கும் ஒருநாள் சம்பவம். அந்தப் பிரமுகர் அதிகாலை யில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வெளியே தோட்ட வேலை செய்யும்  வேலையாள்  காத்துக் கொண்டிருப்பதாகத்தகவல் கிடைத்தது. உடனே அந்தப் பிரமுகர் படுக்கையை விட்டு எழுந்து முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு பனியன் லுங்கியுடன் அப்படியே வெளியே வந்தார். வெளியே வந்து தோட்டவேலையாளிடம் இன்று செய்யப்பட வேண்டிய வேலைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார். 
               மறுபடி அந்தப் பிரமுகர் வீட்டில் வந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க அவருக்கு வேண்டிய நபர் வந்திருந்தார். உடனே அந்தப் பிரமுகர் கொடியில் காயபோட்டு இருந்த துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு வெளியே வந்து அந்த நபரிடம் பேசினார். பின்னர் அந்த நபர் பிரமுகரிடம் சொல்லவந்த செய்தியைச் சொல்லி வீடு திரும்பினார். 

                 அந்தப்பிரமுகர் வீட்டிற்குள் நுழைந்து இன்றையச்செய்தித்தாளை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று படித்தார். செய்தித்தாளில் உள்ள சுடச்சுட செய்திகளை விருவிருப்பாகப் படித்து கொண்டிருந்தார். அந்தச்சமயத்தில் நகராட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்தப் பிரமுகரிடம் பேச வந்திருக்கிறார் என்ற தகவல் வருகிறது. உடனே அந்தப் பிரமுகர் அவசரமாக எழுந்து லுங்கியை மாற்றி வெளுத்த வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு அத்துடன் பால் போன்ற வெண்மையானச்சட்டையைப் போட்டுக்கொண்டு தலையை அழகாக வாரியபடி வெளியே வந்து நகராட்சி அதிகாரியைச் சந்தித்து பேசினார்.
       ஆக, அந்தப் பிரமுகர் தன்னை சந்திக்க வந்த நபர்களின் தகுதிகளுக்கேற்ப தனது ஆடைகளை மாற்றிக் கொண்டதைக் கவனித்தோம் அல்லவா.
     இப்படி வந்திருக்கும் ஆட்களின் தகுதிகளுக்கேற்ப நாம் ஆடை அணிய வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் நமக்குத் தனியாகத்தகுதிகள் இல்லாததால் அணியும் ஆடை மூலமே நம் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. "ஆள் பாதி ஆடை பாதி" என்ற பழமொழி நமக்குத் தெரியும். இன்று நம் அணியும் ஆடைகள் தான் நமக்கு நன்மதிப்பைத் தருகிறது. அரசு வேலையில் உள்ளவர்கள் அவரவர் வேலையைப் பொறுத்து ஆடைகள் அணியும் விதம் மாறுபடுகிறது.
      கிழிந்த கந்தலாடை அணிந்திருந்தவரிடம் பலர் பேசமாட்டார்கள். மனிதனின் ஆடை மாறிய சம்பவம் உங்களுக்குச் சுவாரசியமாக இருந்தது என்று நினைக்கிறேன்.

மனிதனின் ஆடை மாறாத சம்பவம்:

காந்தியடிகளின் ஆடை:

          மனிதனின் ஆடை மாறாத சம்பவத்திற்கு உதரணமாக அண்ணல் காந்தியடிகளைச் சொல்லலாம். காந்திஜி  1927 ஆம் ஆண்டு மதுரையில் தனது ஆடையை மாற்றிக் கொண்ட பின்னர் அவர் சாதரண மக்களைப் பார்ப்பதற்குப்
பயன்படுத்திய ஆடையிலே தான் உலகத்தையே ஆண்ட இங்கிலாந்து இளவரசரையும் சந்திக்கச் சென்றார். இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டும் தான் இந்நாட்டு ஏழைகளைச் சந்திப்பதற்கும் இங்கிலாந்து பேரரசரைச் சந்திப்பதற்கும் அண்ணல் காந்தியடிகளுக்குப் பயன்பட்டது.
         காரணம் காந்தியடிகள் தன்னை மகாத்மாவாக உயர்த்தி இருந்ததால் அந்த ஒரு தகுதிக்கு உலகமே தலைவணங்கிய நிலையில் அவர் எவ்வளவு எளிமையாக ஆடை அணிந்து இருந்தாலும் அவருக்குள்ள மரியாதை குறையவில்லை. 
வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் ஆடை:
          இன்று மகனாகப் போற்றப்படுகிற வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலத்தில் ஒரு அன்பர் தங்கள் வீட்டுத் திருமணத்துக்கு விரும்பி அழைத்தார் என்று அங்கே வள்ளலார் புறப்பட்டுச் சென்றார். அவருடைய எளிமையான கோலத்தைப் பார்த்து அந்தத் திருமண வீட்டு வாசலிலே வரவேற்புக்கு நின்றவர்கள் அவரை உள்ளே விட மறுத்து விட்டனர்.
      இராமலிங்க அடிகள் அமைதியாக ஏதும் பேசாமல் எதிரே இருந்த திண்ணையில் போய் அமர்ந்தார். சற்று நேரத்தில் திருமண வீட்டின் சொந்தக்காரர் வெளியே வந்தார். எதிர் வீட்டுத் திண்ணையிலே அமர்ந்திருக்கும் வள்ளலாரைப் பார்த்து விட்டுப் பதறிப் போய்'தங்கள் இங்கே வந்து இருக்கலாமா... 'வீட்டிற்குள் வாருங்கள் ஐயா' என்று மிகப்பணிவுடன் அழைத்தார். 
      வள்ளலாரின் கதையைப்படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more

மனிதனுக்கு ஆடைத்தேவை:

        சின்னச் சிறுவயதில் பிள்ளைகள் தங்கள் அணிவதற்கு நல்ல ஆடை இல்லாவிட்டால் எவ்வளவு தாழ்வு மனப்பான்மை வரக்கூடும்? 
       அந்தத் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகத்தங்கள் திறமைகளைக்கூட வெளிப்படுத்துவதற்குத் தயங்கி விடுவார்கள். எனவேதான் குழந்தைகள் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தச் சீருடைமுறை  பள்ளிகளுக்கு வந்தது.
     மக்கள் எளிதில் அடையாளம் காண காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அனைவரும் சீருடை அணிந்து பணிபுரிகின்றனர்.
     போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் சீருடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். 
    "ஆடையில்லாத மனிதன் அரை மனிதன்" என்ற பழமொழி மனிதனின் ஆடை எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தரமான ஆடைகளை அணிவோம்!தன்னம்பிக்கையுடன் வாழ்வம்!!
 குறைந்த விலையில் தள்ளுபடி விலையில் ஆடைகள் வாங்க 
touch the picture check it 

Thursday 9 July 2020

Time management நேர மேலாண்மை

நேர மேலாண்மை Time management 

     நேரம் Time 

மனிதர்கள் பலர் வாழ்க்கையில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. யாரெல்லாம் சரியாக நேரத்தைப் பயன்படுத்து கிறார்களோ அவர்கள் வாழ்வில் ஜெயிக்கலாம். பணம், பொருள்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்க முடியும். ஆனால் நேரத்தைச்சேமிக்க முடியாது. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இன்று July 2020 திரும்ப வராது. போனநேரம் போனதுதான். "காலம் பொன் போன்றது" 'ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?' போன்ற பல பழமொழிகள்  காலத்தின் அருமையை கூறுகிறது.

       நேரம் என்பது பிரதமந்திரி முதல் பிச்சைக்காரன் வரை அனைவருக்கும் சரிசமமாக  வழங்கப்பட்டுள்ள சொத்து. நேர மேலாண்மை  (Time management) பற்றி விளக்கமாகப் படிக்கலாம்.

Time management is self management:

      நேரம் ஆதியும் அந்தமும் இல்லாதது. அதாவது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. நேரத்தை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. ஒவ்வொருவரும் நேரத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதைத்தான்  self management என்று சொல்லலாம்.

              ஒரு நாளைக்கு  24 மணி நேரம் சமமாக அனைவருக்கும் இருந்தாலும் அந்த நேரத்தை எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதில் தான் ஒருவரின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. 
           நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நேரம் அழுகி வீணாகும் பொருள். தொடர்ந்து  அழுகிக்கொண்டே இருக்கும்.ஒவ்வொரு மணித்துளியும் நாம்  ஒன்று செய்யாமல் வீணாகியிருந்தால் அது கடந்த காலமாகிவிடும்.

நேர மேலாண்மையின் முக்கியத்துவம்: Importance of time management 

          நேரத்தைச் சரியாக மேலாண்மை செய்பவர்கள் தான் இன்று உலகில் பணக்காரர்களாகவும்.சாதனையாளர்களாகவும்
உள்ளனர். பலர் தம் இளம்பருவத்தில் நேரத்தை வீணாக்கிப்பிற்காலத்தில் கஷ்டப்பட்டு  உழைத்து வருகிறார்.

    இளம்பருவத்தில் நேரத்தை ஒதுக்கித்திட்டமிட்டு உழைப்பவர்கள் பிறர் உதவியின்றி பிற்காலத்தில் வாழலாம். இதற்கு நம்வீட்டில் சின்னப்பிள்ளையில் கஷ்டப்பட்டு படித்தால் பிற்காலத்தில் சந்தோஷமாக இஷ்டப்படி வாழலாம் என்று    சொல்லவார்கள். இளமையில் நேரத்தை வீணாக்கி முதுமையில் வேதனைப்பட்டு வாழ்பவர்கள் நம் நாட்டில் கோடிக்கணக்கில் உள்ளனர். நீங்கள் அந்தப் பட்டியலில் வாராமல் இருக்க சரியாக நேரத்தை மேலாண்மை  (time management) செய்யக்கற்றுக்கொள்ளுங்கள். இதோ நேர மேலாண்மைப்படிகள். 

நேரமேலாண்மைப்படிகள்:(timemanagement steps)

      நம்வீட்டில் பொருள்களை அங்கே இங்கே என்று வைத்து விட்டுத்தேவையான நேரத்தில் தேடி அலைந்து திரிந்து நேரத்தை வீணடிக்காமல் பொருள்களை அதற்குரிய இடத்தில் வைத்துப்பழகுங்கள். இதனால் நேரமும் உடல் உழைப்பும் மிச்சமாகும்.

TIME MANAGEMENT STEP 1

            சிலர் வீடுகளில் வெளியேச்சென்று வந்தஉடன் காலணிகளைக்(செப்பல்ஸ்) கழற்றி விட்டு வெளியே போட்டுவிடுவார். மறுநாள் காலை வெளியில் செல்லும்போது தேடி அலைவார்கள். இரவில் காலணிகளை நாய் தூக்கிச்சென்றிருக்கும். சின்னப்பிள்ளைகள் விளையாட்டாகப்போட்டுக்கொண்டு  தூரத்தில் போட்டுவிடுவார்கள். இதைத் தவிர்க்கக் காலணிகளை சிறிது உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி பொருள்களைப் பராமரிப்பது house keeping என்று சொல்லவார்கள். 
        இதே போல்தான் அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகள் நிரம்பி வழியும். சரியான இடத்தில் பதிவேடுகள் வைக்க வில்லை என்றால் பதிவேடுகள் தேவையான போதுதேடி அலைய வேண்டும். இதுவே இன்றையச் சூழலில் வீட்டிலும், அலுவலகத்திலும்  80 சதவீத பிரச்சனையாக உள்ளது. பதிவேடுகளைப் பெயர் பட்டியல் ஒட்டிப்பராமரிக்க வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும். இது time management step one.

             TIME MANAGEMENT STEP 2

              இன்று என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் எனப்பட்டியல் தயார் செய்ய வேண்டும். இந்தப்பட்டியலை நேற்று செய்ய வேண்டும். நேற்று பகல் நேரத்தில் செய்ய முடியாது. செய்யச்சரியான நேரம் எது? நேற்று இரவு தான். அதாவது நாளைக்கு செய்யக்கூடிய வேலையை இன்று இரவு தூங்கச்செல்லும் முன் பட்டியல் தயார் செய்துவிட வேண்டும். அதில் முதலில் செய்யும் வேலை எது என்று குறித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வேலையை விரைவில் செய்து முடிக்க முடியும். இது Time management செய்யும் வழி இரண்டு.

TIME MANAGEMENT STEP 3

            தொலைபேசி மற்றும் அலைபேசி என்பது மிக மிக அரிய வரப்பிரசாதம். ஆனாலும் பலருடைய நேரத்தைக்கொள்ளை கொண்டுச்சென்றவிடுகிறது. போன்வந்தவுடன் வணக்கம் சொல்லி நேராக விஷயத்தைச் சொல்ல வேண்டும்.பலர் ஊர்க்கதை, உலக கதை என மணிக்கணக்கில் பேசி நேரத்தை வீண் அடிப்பார்கள். பலர் போன்வந்தவுடன் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுவார். நீங்கள் இப்படிப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டாம். சொல்லவந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க. இப்படியும்  நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது நேர மேலாண்மையின் மூன்றாவது படி.
       Time management பற்றிப்பல தகவல்கள் படிக்க இங்குச்செல்லலாம். 

             TIME MANAGEMENT STEP 4

          பல வீடுகளில் இன்று டிவி காலையில் எழுந்ததும் போட்டுவிடுவார். அது அப்படியே இரவு தூங்கும் வரை இயங்கிக்கொண்டு இருக்கும். இன்றைய மிகப்பெரிய நேர விழுங்கி டிவி தான். இன்று கேபிள் டிவி அல்லது டிஷ் டிவி வைத்து இல்லாதவர்கள் வீடு மிகக் குறைந்த அளவே இருக்கும். டிவியில் ஒளிபரப்பாகும் நாடகம், படம் என மாறிமாறி பார்த்து நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
             இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிப்பில் நாட்டம் குறைகிறது. Home work செய்ய நேரமில்லை. போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வெற்றி பெற்று வேலைக்குச்செல்ல முடியாமல் போகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் நாடகத்தைப் பார்த்துக்
கொண்டே வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்யவில்லை என்று கணவன் மனைவிக்குள் சண்டை. இப்படி தொலைக்காட்சி தொல்லைக் காட்சியாக மாறி நம் நேரத்தைக் கொள்ளை கொண்டுச்சென்றுவிடுகிறது. டிவி குறிப்பிட்ட நேரத்தில் பார்த்து விட்டுப் பிறகு மற்ற வேலைகளைச் செய்யப்பழகிக் கொள்ளுங்கள். இது time management நான்காவது படி. 

         TIME MANAGEMENT STEP 5

            காலையில்  வேலைக்குச் செல்லும்போது அவசரமாகக் கிளம்பி ஒடுபவர்கள் பலர் இன்று உள்ளனர். இதனால் பணிக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்று விபத்தும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முதல் நாள்  இரவே நாளை அணியப்போகும் ஆடைகள், கொண்டுச்செல்லும் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் பதற்றமின்றி வேகமாக வேலைக்குச் செல்லலாம். இது time management ஐந்தாவது படி. 


TIME MANAGEMENT STEP 6

                    இன்று மனிதன் மிக அதிக அளவில் நேரத்தை வீண் அடிப்பது ஒன்று தூக்கம். தூக்கம் மனிதனுக்கு மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அதிகமாகி பகலில் தூங்குவது, இரவிலும் தூங்குவது எனத் தூங்கிக் கொண்டே இருந்தால் இளமைப் பருவம் வீணாகிவிடும். மாணவப்பருவத்தில் தினமும் ஏழு மணி நேரத்திற்குமேல்  தூங்கினால் முன்னேற முடியாது. தூக்கம் பற்றிய பாடலைக் கேட்டு இருப்பீர்கள். ஆகவே தூக்கத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள இதைத் தொட்டுப்படிங்கள். TOUCH it Read more
தூங்குவது சரியான அளவில் இருந்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது Time management ஆறாவது படி.

TIME MANAGEMENT தள்ளுபடி விலையில் புத்தகம் 

Time management புத்தகம் வடிவில் படிக்கப் பல அற்புதமானக் கருத்துக்கள் உள்ளன. இதைத் தொட்டுப்படியுங்கள் தள்ளுபடி விலையில் offer sale வாங்கி மகிழுங்கள். 

            
                           

         இன்று நம் நேரம் எப்படி எல்லாம் கழிந்தது? எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம். 
                நாளை நேரத்தை வீணாக்க கூடாது என்று சிந்தியுங்கள். வாழ்வை வளமாக்குங்கள். 

Monday 6 July 2020

Goal setting

         Goal setting 

Goal setting அவசியம் 

            Goal setting எப்படிச்செய்ய வேண்டும். Goal என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொண்டால் தான் Goal setting செய்ய முடியும். ஆண்களுக்கு New bike வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.பெண்கள் நிறைய நகைகள் எடுக்க வேண்டும் நினைப்பார்கள். குடும்பத்தலைவருக்கு அழகான வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் நினைத்தது நடக்க Goal setting அவசியம். Goal setting செய்வது எப்படி என்று இந்தப்பதிவில் படிக்கலாம்.
                         
           

     Goal 

       Goal என்றால் தமிழில் இலக்கு என்று பொருள். இலக்கு என்பது நம் வாழ்க்கை எதையாவது ஒன்றைச் சாதிப்பது. 
                    மாணவர் பருவத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கை எட்டி அடைவது. 

போட்டித்தேர்வின் goal setting 

          TNPSC, TRB, TET, UPSC போன்ற போட்டித்தேர்வில் இந்த ஆண்டின் இறுதியில் வெற்றிப்பெற்று வேலைக்குச்செல்வேனென்று GOAL Setting செய்வது. 
             தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உடல் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றும் Police  பணியில் சேர்வதற்கான Goal setting செய்வது போன்றவை தான் Goal. 
      இலக்கை (Goal)அடைந்தால் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாழ்வில் ஒரு சாதனைப்படைத்தது போல் நம் மனம் மகிழும். சரியானப்பாதையில் சென்றால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைய முடியும்.

Goal setting செய்வது எப்படி 

                    மனதில் தோன்றும் ஆசைகள் இலக்குகள் ஆகாது. Goal setting செய்வது எப்படி? Goal setting சரியாகச் செய்துவிட்டால் முழுமையாக வெற்றி பெற்று விடலாம்.  
             
                              மற்றவர்களைத்திருப்திப்படுத்த வேண்டும் என்றும்,அவர் சொல்லினார் இவர் சொல்லினார் என்றும், மற்றவர்கள் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்றும், உலகத்திற்கு proof செய்ய வேண்டும் என்றும் Goal setting செய்தால் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் அந்த Goal யை விட்டு வெளியே தள்ளிவிடும். 

BIG GOAL SETTING 

          Goal setting செய்யும்போது big goal setting இருக்க வேண்டும். 30,00,000 லட்சத்தில் இரண்டு மாடி வீடு கட்டுவேன். 20,00,000 லட்சத்துக்குக்கார் வாங்க வேண்டும்.    
     ஐந்து ஆண்டுகளில் தொழிலில் பத்து லட்சம் ரூபாய் நிதி செய்து தொழிலை மேம்படுத்துவது, நம்மிடம் இருக்கும் கடனை ஓராண்டில் திருப்பி செலுத்துவது, பள்ளி மாணவர்கள் எனில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 400 மேல் மதிப்பெண் பெறுதல், ஆசிரியர் எனில் இந்த ஆறு மாத காலத்தில் தங்களிடம் பயிலும் மாணவர்கள் நூறு சதவீதம் வாசிப்புத்திறன் மேம்படுத்த வேண்டும் என்று Goal setting செய்யலாம்.

      உங்கள் goal setting உங்களை motivation செய்து உயிர்ப்பிக்க வேண்டும். வெறியோடு வேலை செய்ய உங்களை எது தூண்டுகிறதோ அது தான் சரியான Goal setting. நாம் வாங்கிய கடனை நாம்தான் திருப்பிச்செலுத்த வேண்டும். நாம் அடைய வேண்டிய இலக்கை எட்ட நாம்தான் Goal setting செய்ய வேண்டும். யாரும் நம் இலக்கை அடைய goal setting செய்து தரமாட்டார்கள்

Smart Goal setting:

            உங்களுக்கு அதிகம் பிடிச்ச விஷயம் என்ன? உங்களுக்குச்சந்தோக்ஷம் தரக்கூடிய விஷயங்கள் என்னவென்று முடிவு செய்து கொள்ளுங்கள். அந்தச்சந்தோக்ஷத்துடன் அந்த இலக்கை அடைவது எப்படி என்று யோசிங்கள். 
உதரணமாக உங்களுக்குக்கிரிக்கெட்  விளையாட்டுப்பிடிக்கும் எனில் அதில் விளையாட்டு முறைகள் TV யில் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுங்கள். டெஸ்ட் மேட்ச் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். 
         சிலருக்கு நாடகம் பார்க்க விரும்பினால் அதைக் கொண்டேGoal setting செய்ய வேண்டும். நாடகத்தின் கதை எழுதலாம். வசனம் எழுதலாம். இயக்குநர் எப்படி ஆவது என்று இணையதளத்தில் சென்று பார்க்கலாம். Photo graphics, vedio editing போன்றவை செய்யலாம். நடிக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டு நடிகர் ஆகலாம். இப்படி நமக்குப் பிடித்த விஷயத்தைக் கொண்டு Goal setting செய்தால் அந்த Goal மிக விரைவில் அடையலாம்.

      Smart goal setting என்பது மிக விரைவாக இலக்கை அடைய உதவும் காரணிகள். 
    S- specific 
     M- Measurable 
       A - Attainable 
        R - Relevant 
          T- Time bound 

Specific - குறிப்பிட்ட 

         Goal setting specific ஆக எதைச்செய்ய வேண்டும் என முடிவு செய்யுங்கள். உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவரவருக்கு ஆயிரம் இலக்குகள் இருக்கும். உங்களுக்கு என்னஇலக்கு என்பதைக் குறிப்பிட்டு Goal setting செய்ய வேண்டும். 

Measurable -  அளவிடத்தக்க

          நாம் செய்யும் Goal setting இலக்கை அளவிடத்தக்கதாக இருக்க வேண்டும். அந்த இலக்கு எவ்வளவு முடிந்திருக்கிறது. இலக்கு எவ்வளவு முடிக்க வேண்டும் என்று அளவிடத்தக்க இருத்தல் வேண்டும். 
உதாரணமாக இந்த மாதத்தில் நம் தொழில் கிடைத்த வருவாய் இருபதாயிரம் ரூபாய். இதே போல பத்து மாதங்களில் இரண்டு லட்சம் ரூபாய் சேமித்து தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று அளவிடத்தக்கதாக இருந்தால் வேண்டும். 
        பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த வாரத்தில் செய்யுள் பகுதியில் மொழிவாழ்த்துப் படித்து முடித்தேன். அடுத்த மாதத்தில் திருக்குறளில் வினா விடை படித்துவிட வேண்டுமென இலக்கு அளவிடத்தக்கதாக Goal setting இருக்க வேண்டும்.

Attainable அடையக்கூடியது

           Goal setting அடையக்கூடியதாகவும், சாதிக்க வல்லதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாகச்சூரியனில் இறங்கி ஆராய்ச்சி செய்வது போன்றவை அடையக்கூடிய Goal setting அல்ல. நான் ஒரு மாதத்தில் உயரமாக வளர்ந்து விடுவேன் போன்ற Goal setting அடையக்கூடியதல்ல, பயனற்றது.இது  அர்த்தமற்ற goal setting ஆகும்.எது உங்களால்
முடியும். நடைமுறை சாத்தியமான Goal setting செய்வது மிகச்சிறந்தது.

 Relevant முடித்துக்காட்டக்கூடியது

         Goal setting முடித்துக்காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். நான் இரண்டு மாதத்தில் இருபது லட்சத்தில் கார்EML LOAN இல்லாமல் வாங்கிவிடுவேன். இது போன்ற Goal setting செய்ய கூடாது. நாம் வாங்கும் இருபதாயிரம் ஊதியத்தில்  குடும்பச்செலவு போகக்கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் கார் வாங்க முடியும்.
          Spoken English course கற்றுக் கொண்டப்பின் ஆங்கிலத்தில் பேசும்திறன் வளரும். இதன் முடிவைதாமே உணரலாம். பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வில் இத்தனை மதிப்பெண் பெற வேண்டும் என்று Goal setting செய்து அந்த மதிப்பெண் பெற்று விடலாம். இது போன்ற goal setting முடித்துக்காட்டக் கூடியது.

Time bound காலம் வரையறைக்குள்

       Goal setting காலவரையறைக்குள் இருக்க வேண்டும். அதாவது இத்தனை நாள்களில் அல்லது இத்தனை வாரங்களில் அல்லது இத்தனை மாதங்களில் இந்த இலக்கை அடைய goal setting செய்ய வேண்டும். உதாரணமாகப் பள்ளி மாணவர்கள் மேமாதம் முப்பது நாள்களில் computer course இல் painting, power point, slide show போன்ற goal setting செய்து இலக்கை அடையலாம். Financial Goals setting செய்யும்போது பத்தாண்டுகளில் தொழிலில் மேம்படுத்துவது போன்றவை காலவரையறைக்குள் இருக்கும்.

Three type Goal setting 

         "சிந்தனையில் தெளிவிருந்தால் திறந்த மனம் இருக்கும்;திறந்த மனமிருந்தால் இலக்குகள் நிர்ணயிக்கும்;முழு முயற்சி இருந்தால் வெற்றிகள் கண்டிப்பாக்கிடைக்கும்; வெற்றிக்கிடைத்தால் உங்கள் வாழ்க்கை உயரும். எத்தனை வகையான இலக்குகளையும் மூன்று வகையான இலக்காகப் பிரித்து Goal setting செய்துவிடலாம்.

 Short term goal setting          

         போட்டித்தேர்வில் இத்தாண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய goal setting தினமும் இரண்டு மணி நேரம்படிப்பது,  நல்ல சத்தான உணவுகள் சாப்பிடுவது, உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வது சிறு தேர்வுகளின் வினாக்களுக்குத்தாமே விடை காண முயற்சி செய்வது போன்ற சிறு இலக்குகளை அடைய Short term goal setting உதவும். ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு Short goal setting செய்து கொள்வது நல்லது.

Mid term goal setting

       Mid term goal setting மூன்று மாதங்கள் முதல் மூன்று வருடம் வரை திட்டமிட்டுக் கொள்ளலாம். இதில் காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத்தேர்வில் பங்கேற்று நினைத்த மதிப்பெண் பெறுதல். வீடு கட்டுவதற்கு தேவையான பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச்சேமித்திருத்தல். கார் வாங்கத் தேவையான பணம், எப்படி வாங்குவது EMIயா ரொக்கபணமா என முடிவு செய்தல். இந்த mid term goal setting சரியான இலக்கை நோக்கிதான் செல்கிறோமா? என்று நமக்குநாமே சோதித்தறிய உதவும்.

Long term goal setting:

        வாழ்க்கை உச்சியை அடைய long term goal setting உதவும். Long term goal setting மூன்று ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்ய வேண்டும்.நான் படித்து மருத்துவர் ஆவது, ஐந்து ஆண்டுகளில் வீடு வாங்குவது, பத்தாண்டுகளில் தொழிலதிபர் ஆவது போன்றவை long term goal setting ஆகும்.

  Goal setting தேவைகள்:

             ஒவ்வொரு மனிதனின் இலக்கு மாறுகிறது. அதுபோல் அவர்களின் goal setting மாறும். ஆயிரம் இலக்குகள்  இருப்பினும் இன்றைய மனிதனின் முக்கிய இலக்கு நல்ல வசதியான வீடு, மகன்கள் /மகள்களுக்கு நல்ல கல்வி தருவது, அவர்களைப் படிக்க வைத்து மருத்துவராகவோ பொறியியல் வல்லுநராகவோ, ஆசிரியராகவோ, செவிலியராகவோ அரசு வேலை கிடைக்க வேண்டியத்தகுதியை வளர்த்து அரசு வேலையில் அமரச்செய்தல்.
இதை அடைந்தால் அடுத்து கார் வாங்கி செட்டிலாகி விட வேண்டும் என்று Goal setting இருக்கும்.

                             Goal setting செய்தால்  வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் personal value improve செய்யனும். Goal setting உங்கள் தொலைநோக்குபபார்வையாக இருக்கண்டும். 

Goal setting செய்தபின் 

         Goal setting செய்துவிட்டு பின்பு யார் சொன்னாலும் கேட்காமல் இலக்கை நோக்கி கடிவாளம் கட்டியக்குதிரை போல் முன்னேறுங்கள். Goal setting செய்தபின் பணம் இருக்காது, சாப்பாடு போட ஆள் இல்லாதது போல் தோன்றும். சாப்பிட்டயா? எனக் கேட்க ஆள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கைதட்ட ஆள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

மார்ட்டின் லூதர் Goal setting

      மார்ட்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு "உங்களால் பறக்க முடியவில்லையென்றால் ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடந்து வாருங்கள். நடக்க இயலாது எனில் தவழ்ந்து வாங்க, எப்படியாவது இலக்கை நோக்கி goal setting செய்து முன்னேறுங்கள்.
       இன்னும் இதைவிட பல அரிய தகவல்கள் இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more
        goal settting செய்து இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

Friday 26 June 2020

How to manage your fear? பயம். . .

         How to manage your fear?                           பயம்

சிறுவயதில் பயம்   

              இதுல பயமா இருக்கு, அதுல பயமா இருக்கு என்று நாம் சின்னச் சிறு வயதில் பயந்து இருந்தோம். நம் சிறு வயதில் நம்மை வளர்த்த பெற்றோர், தாத்தா, பாட்டி என பலரும் நம் ஆழ்மனதில் பயத்தை உருவாக்கி உள்ளனர். டாக்டரைப் பார்த்து,வாத்தியாரைப் பார்த்து, போலீசாரைப் பார்த்து இளம் வயதில் பயந்தவர்கள் பலர் உள்ளனர். 
             இருட்டைக் காட்டி பயமுறுத்தி வைப்பார்கள். இப்படி நமக்கு பயம் என்ற உணர்வு மனதில் பதிந்து விட்டது. நம் கூடப் பிறந்த பிறப்பாகவே பயம் மாறி விட்டது.
         குழந்தை பருவத்தில் எதற்கெல்லாம் பயம்? யாருமில்லாத தனிமை ஒரு பயம். இருட்டைக் கண்டால் பயம். 

மாணவனுக்கு எங்கு பயம்?

        பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். புதிய மாணவரிடம் பேச பயம். போட்டிகளில் பங்கேற்க பயம். பரீட்சை எழுத பயம். மேடை ஏறி பேச பயம்.
             கல்லூரி சென்று புதிய மாணவர்கள் உடன் பேச,பழக பயம். பதினாறு வயது கடந்த பின்னரும் கூட பயம் இருக்கும். பள்ளி வாழ்க்கை முடித்து கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பயம்.
                     போட்டிகள் நிறைந்த உலகில் போட்டித்தேர்வு எழுத பயம். போட்டித்தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமா? என்பதில் பயம். 

பெண்ணின் பயம் 

          பெண்கள் தமக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பதில் பயம். கரப்பான் பூச்சியைப் பார்த்தல் பயம்.பல்லியைப் பார்த்தல் பயம். போட்டிகள் நிறைந்த உலகில் எப்படி வாழப்போகிறோம்? என்று பயம். திருமணம் நடக்குமா? என்று பயம். 
                      திருமணம் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனை வரும்? என்று பயம். நாம் இல்லாமல் குடும்ப எப்படி நடக்கும்? என்று பயம். பயந்து பயந்து பாதி வாழ்க்கை முடிந்து விடும்.

       பயம் விளக்கம் 

         பயம் என்றால் என்னவென்று தெரியுமா? உண்மைக்குப் புறம்பாக இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குவது. இதை தான் fear என்றார்கள். Fஎன்பது falls, a என்பது appear, R என்பது reality. 
         பயத்திற்கு காரணம் மனமே. பயம் கவலையை உண்டு பண்ணும். 

கவலை, பயம் 

       "நடந்து போன கசப்பான நிகழ்ச்சிகளால் கவலை. நடக்கப்போகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்காகவும் பயம் "
     இப்படி பயம், கவலை ஆகிய இரண்டாலும் பின்னப்பட்ட ஒரு ஆடையாகத்தான் பலர் மனம் உள்ளது. 
   "நேற்று என்பது உடைந்த பானை
      நாளை என்பது மதில் மேல் பூனை
     இன்று என்பது கையில் உள்ள வீணை"
   நேற்று முடிந்து விட்டது. நாளை எப்படியும் மாறலாம். இன்று நம் கையில் உள்ள நேரத்தை,  நேற்று பெற்ற அனுபவங்களோடு சிறப்பாக்க வேண்டும். பலரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? 
   கடந்த காலம் பற்றிய கவலை 
  வருங்காலத்தைப் பற்றிய பயம் 
   நிகழ்காலம் _ மேலே கூறிய இரண்டின் கலவை. பயத்தால் நமக்கு நன்மை உண்டா? இல்லையா? இதன் பதிலை உங்களிடமே விடுகிறேன். 
தேர்வு  பயம் :
       தேர்வு என்று பள்ளியில் அறிவித்தவுடன் மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் மேலோங்கி நிற்கும் உணர்வு பயம். தேர்வு வந்து விட்டாலே போதும் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரியாகிவிடும்.தேர்வு பயம் யாருக்குத்தான் இல்லை? 
             நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்புடன் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

       பயத்தால் ஏற்படும் பிரச்சினைகளை

         நமக்கு தெரிந்த சில பிள்ளைகள் பகல் முழுவதும் படித்தும், இரவில் கண் விழித்து நன்றாக படித்து இருப்பார்கள். ஆனால் தேர்வு அறைக்குச்சென்ற உடனே படித்தது அனைத்தையும் மறந்து விடுவார்கள்.                                வினாத்தாள் வாங்கியவுடன் படித்துப் பார்த்தால் விடை தெரிவது போல்தோன்றும். விடை எழுத வராது. எனவே மனதில் பட்டதை எல்லாம் எழுதி விட்டு வந்து விடுவார்கள். திருத்தும் ஆசிரியர் பாடுதான் திண்டாட்டம். 
       அது மட்டுமா, இரவில் கண் விழித்து படித்தாகப் பொய்சொல்கிறாயா? என்று வீட்டில் இருப்பவர்களின் கேள்வி கனைகளும் துளைக்கும். இதன் விளைவு படிப்பின் மேல் ஆர்வம் போய்விடும். 

நேர்முகத் தேர்வு பயம் 

       சிலர் நேர்முகத்தேர்வுக்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வருவார். அங்கு தேர்வு செய்பவர்கள் கேட்கும் கேள்விக்கு மிகச்சரியான பதில் தெரியும். ஆனால் பயத்தின் காரணமாக நெற்றியிலும், கைகளிலும் ஏன் உடம்பில் கூட வியர்வை வியர்த்துக் கொட்டிபதிலையும் மறந்து விடுகிறார்கள். 
       வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் கைதூக்க, பதில் சொல்ல பலரும் பயப்படுவார்கள். 
  பயத்தைக் குறைக்க :
      பயத்தை மாற்றவில்லை என்றால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. பயம் வரும் போது செயலில் தொய்வு ஏற்படும். பரிச்சையில் பயம் வந்தால் பாஸ் ஆக முடியாது. மேடையில் ஏறி பேச பயம் வந்தால் திறம்பட பேச முடியாது.

   பயம் குறைக்கும் வழிகள்

     பயத்தை குறைக்க சிலவழிகளைப் பதிவிடுகிறேன். 

சிறு சிறு செயல் செய்ய பயம் 

    **பயத்தைப் போக்க சின்ன சின்ன செயல்களை செய்ய வேண்டும். மேடையில் ஏறி பேசுவதற்கு கண்ணாடியின் முன் நின்று பேசிப்பார்க்கலாம். தேர்வுக்கு பயமாக இருந்தால் சின்ன சின்ன பாடப்பகுதியை மனப்பாடம் செய்து எழுதிப் பழக வேண்டும். வாய் மொழியாக ஒப்புவித்தல் செய்யலாம்.

பயத்தை அணுகுதல்  

     **பயத்தை குறைக்க என்னசெய்வது? என்று யோசிக்கலாம். நமக்கு பயம் தரும் செயல்களைத் தள்ளி போடாமல் பயத்தை முன்னோக்கிச் செல்லுங்கள். பயத்தை தள்ளிப்போடபயம் அதிகரிக்கும்.  பயம் குறையாது.
                   வழியில் யானையைப் பார்த்தால் பயம்.அருகில் சென்றால் அதிக பயம். யானை தும்பிக்கையை நம் தலையில் வைத்தால் பயம் குறையும். பயத்தை தள்ளிப்போட்டால் பயம் அதிகரிக்கும். நேருக்குநேர் எதிர் கொண்டால் பயம் குறையும்.  

பயம் உளவியல் 

     **பயம் தோன்றும் போது காகிதம், பேனா கொண்டு எழுதுங்கள். பயம் தோன்றக் காரணங்கள் எழுதி வைத்து விட்டு பின்னர் வாசித்து பாருங்கள். பயம் குறையும் என்பது உளவியல் நிபுணர்கள் கருத்து.

பயம் தைரியசாலி  

     **உங்கள் பயத்தை நல்ல தைரியமான நபர்களிடம் பகிர்ந்து கொண்டால் அவர்கள் உங்களுக்கு பயத்தைப் போக்க தைரியம் சொல்லுவார்கள். பயத்தை மனதில் இருந்து  வேரொடு பிடுங்க தன்னம்பிக்கை போதும். அந்த தன்னம்பிக்கையை தைரியமானவர் உங்களுக்குத் தருவார். 
         'யானைக்கு பலம் தும்பிக்கையிலே,
          மனிதனுக்கு பலம் நம்பிக்கையிலே,'
  தன்னம்பிக்கை வந்தால் பயம்  பறந்தோடிப் போகும்.

     முடிவுகளுடன் பயம் 

 **பரிட்சையில் தோற்றல் என்ன நடக்கும்? என்று சிந்தியுங்கள். பரிட்சையில் தோற்றல் திரும்ப எழுதிக் கொண்டு தேர்ச்சி பெற்று விடலாம். பரிட்சை மீது பயம் போகும்.மேடையில் ஏறி பேசுகையில் தவறு ஏற்பட்டால் என்னதான் நடக்கும் என்று சிந்தியுங்கள். மேடையில் பேச பயம் வராது. 
  பிறர் போல் பயம் கொள்ளாதே!
      பயத்தை தவிர்ப்போம்! 

பயத்தை போக்க உதவும் நூல்


     இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம்.

Thursday 18 June 2020

மன அழுத்தத்தைக்கண்டுபிடி mental stress /health tips

           மன அழுத்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என எளிதாக கண்டுபிடித்து விடலாம்."அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
என்பது பழமொழி. அதன் படி ஒருவரைப் பார்த்த உடனே அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளாரா?என்பதை கண்டுபிடித்து விடலாம். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன அழுத்தம் குறைக்க என்ற பதிவு கீழே உள்ளது. Read more தொட்டு படிக்கவும்.
                  
மன அழுத்தம் காரணமாக அவர்களைச் சுற்றி உள்ள மனித உறவுகளில் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அவர் உறவினர்கள் மீது சந்தேகப்படுவார். அவர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பிறரிடம் சொல்வார். அதாவது வதந்திகளைப் பரபரப்புவார். 
பிறர் மீது பொறமைப்பட்டு போட்டியிடுவார். 
பிறரைக் கண்டு பயப்படுவார், பிறர் நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பார். 
உற்றார், உறவினர்கள் உடன் நெருங்கி பழக மாட்டார். 
அவர்களைப் பார்த்த உடன் முகத்தில் கடுங்கோபம் வந்து விடும். இதனால் அவர்களை விட்டு விலகிச் செல்வார். 
மன அழுத்தம் அதிகமாக உள்ளவரைக் கண்டு பிடிக்க அவர்களின் உணர்வுகள் உதவும். 
அடிக்கடி அழுது புலம்பி கொண்டு இருப்பார். 
அவர் வாழ்க்கை வெறுமையாக உள்ளதாகவும், பயனற்றதாக போய்விட்டது என நினைப்பார். 
அவரிடம் பதற்றம், சங்கடம், கடுமையான கோபம் போன்றவை இருக்கும். 
சதாரண செயலில் கூட தவறு நடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் குற்ற உணர்வு உடன் நடந்து கொள்ளுவார். 
மனஅழுத்தம் அதிகமாக உள்ளவரைக் கண்டுபிடிக்க அவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் உதவும். மன அழுத்தம் காரணமாக தூக்கமில்லாமல் அலைவார்கள். உடனே எரிச்சல் ஏற்பட்டு பேசுவதற்கு சிரமம் படுவார்கள். 
வேகமாக படபடவென்று பேசுதல், அவசரமாக சாப்பிடுதல், வேகமாக நடத்தல் போன்ற நடத்தையில் மாற்றம்(behaviour change)
ஏற்படும். 
அதிக அளவில் போதைப்பொருட்களை உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வருவார். 
அவர் வெளிப்புற தோற்றத்தைப்பற்றி எண்ணாமல் அழுக்கான ஆடைகளை அணிந்தும், குளிக்காமலும் சர்வகாலமும் குடி போதையிலே இருப்பார். 
ஒரு இடத்திற்கு செல்ல சரியான நேரத்தில் ரெடி ஆகாமல் லேட்டாக ரெடியாகி அவசர அவசரமாக சென்று விபத்தை ஏற்படுத்துவார் 
என்னை ஏமாற்றி விட்டார் என்று அவர் நினைத்துக் கொண்டு இருப்பார். 
என்னால் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது, அவனை ஒரு கைப்பார்த்து விடவேண்டும் என்று சொல்வார். 
என்னை அனைவருக்கும் பிடிக்க வேண்டும்,நான் நன்றாக செயல் பட வேண்டும் என அவசரப்பட்டுவிடுவார். 

மன அழுத்தம் காரணமாக குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்படும். 
அதிகமாக கத்திப் பேசுவதால் வாய் உலர்தல் ஏற்படும். எனவே இதய துடிக்கும் விகிதம் அதிகமாகி இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயம் சம்பந்தமான உபாதைகள், பிணிகள், தலைவலி ஏற்படும். 
மன அழுத்தம் காரணமாக பதற்றத்துடன் பேசுவதால் உடலில் சோர்வு ஏற்படும். உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். 
இந்த அறிகுறிகள் வைத்து மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து விடலாம். 
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு சரியான முறையில் மன ஆறுதல் பெற உதவினால் அவரும், அவர் குடும்பமும் வளம் பெறும். 
தீய எண்ணங்களை உனக்கு சொந்தமாக்கி கொள்ளாதே! 
வார்த்தைகள் முக்கியம் அல்ல, அர்த்தங்கள் தான் முக்கியம். 

மன அழுத்தம் குறைக்க manage stress/health tips

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணி சூழலில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. மாறிவரும் சமூக சூழல் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் அதிகமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது.
மாறி வரும் நவீன உலகில் பணிச்சுமை அதிகரித்து மனசோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் அதிகமானால் அவரும், அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். 
அவரின் பணியை செவ்வனே செய்ய முடியாது. மனஅழுத்தம் உள்ளவர்களின் நடத்தையைப்பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக பார்க்கலாம். 
மனஅழுத்தம் குறைக்க எளிய வழிகள் பின்பற்றி நீங்களும்,  உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டுகிறேன். சில வழிகள் நீங்கள் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கலாம். அல்லது வழிகள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம். 
*சிக்கல் அல்லது பிரச்சனைக்குத்தீர்வு காண முடியவில்லை எனில் சத்தம் போட்டுக்கத்த வேண்டாம். வீண் உரையாடல் செய்ய வேண்டாம். ஆரோக்கியமான வாதம் தேவை ஆனால் வீண் விவாதம் தேவை அல்ல. 
*அனைத்து சிக்கல்களையும் அல்லது பிரச்சனைகளையும் தன்னுடையது என கருதவேண்டாம். 
*என்னால் இது முடியாது, அது முடியாது என்ற இயலாமை எண்ணத்தை கைவிடுங்கள். 
*தவறு நடந்து விட்டது எனில் பிறரைக் குறை கூற வேண்டாம். நடந்த தவறை மாற்ற முடியாது. ஆனால் திரும்ப நடக்காமல் இருக்க வழிகளை வகுத்துக் கொள்ளலாமே. 
* சிக்கல் அல்லது பிரச்சனை நினைத்து நினைத்து தினமும் சண்டைப்போடவேண்டாம். மறத்தல் மனதுக்கு நல்ல மருந்து, ஆகவே சிலவற்றை மறந்து விடுவதும் நல்லதே. 
*நான் சொல்லியவாறுதான் நீங்கள் கேட்க வேண்டும் என்று யாரையும் கட்டுப்படுத்த வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. யாரையும் யாரும் திருத்தி விட முடியாது என்ற எண்ணத்தை மனதில் வைக்க மன அழுத்தம் குறையும். 
மேலே சொன்ன அனைத்தும் செய்யாமல் 
இருப்பதே மன அழுத்தத்தைக்குறைக்கும். 
++சொந்தஊர்திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்ல மனஅழுத்தம் குறைந்து மனம் மகிழ்ச்சி அடையும். 
++குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். காமெடியில் பேச மனமே இலேசாகி விடும். குலுங்க குலுங்கச்சிரித்தால் குறைந்து போகும்நோய்கள் என்பது பழமொழி. சிரித்து வாழக்கற்று கொள்ளலாமே. 
++ உங்கள் மனைவி /கணவன், குழந்தைகள் போன்றோரை வீட்டுக்கு அருகில் உள்ள கோயில்,பூங்கா போன்ற இடங்களுக்கு வாரம் ஒரு முறையாவது அழைத்து சென்று வரவும். 
+++குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிவி, செல்பேசி போன்றவைகளை அணைத்து விட்டு உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டால் மன அழுத்தம் எப்படி வரும். மன அழுத்தம் இருந்தாலும் குறைந்து விடும். 
++மன அழுத்தம் ஏற்பட காரணமாக உள்ள சிக்கல் அல்லது பிரச்சனை குறித்து குடும்ப உறுப்பினர்கள் உடன் கலந்துரையாடல்
செய்ய மனஅழுத்தம் குறையும். 
++உங்கள் கருத்துக்களை அனைவரிடமும் பகிர்ந்து ஆதரவு பெற்று கொள்ளலாமே. இந்த சம்பவத்தில் நான் இதை இப்படி தான் நினைத்து பேசினேன், ஆனால் நீ தவறாக புரிந்து கொண்டாய் விளக்கம் தந்து விட மன அழுத்தம் குறையும். 
+++கருத்து வேறுபாடு நிறைந்த சம்பவம் குறித்து பேசி ஒரு முடிவு செய்து விட்டால் பாதி மன அழுத்தம் குறைந்து விடும். 
++ குடும்ப வேலைகளை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்தால் வேலையால் வந்த மன அழுத்தம் குறையும். 
++காலையில் தினமும் நடைபயிற்சி பத்து நிமிடங்கள், மூச்சுப்பயிற்சி ஐந்து நிமிடங்கள், முத்திரை பயிற்சி ஐந்து நிமிடங்கள் என செய்து வர மன அழுத்தம் குறையும். 
இன்று பல குடும்பங்களில் பிரச்சனை பணத்துக்காக வருகிறது. பணத்தை செலவு செய்யும் போதும் பிரச்சனை வருகிறது. கணவனிடம் மனைவி பணம் கேட்க அல்லது மனைவி இடம் கணவன் பணம் கேட்க பிரச்சனை தொடங்கி இருவருக்கும் சண்டை நடக்கும். அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மன அழுத்தம் அதிகமாகி விடும். இதை தவிர்க்க விட்டு கொடுத்துவாழ வேண்டும். "விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை" ஆனால் இங்கு யார் விட்டு கொடுப்பதுதான் பிரச்சனை. ஒருவர் விட்டு கொடுத்துவாழக்கற்றுக்கொள்ளுங்கள், இருவரும் பணத்தை சேமிக்கும் பழக்கத்தைக்கற்றுக்கொண்டால் மனஅழுத்தம் குறைந்து விடும். 
மன அழுத்தம் குறைப்போம்!!
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!!

Monday 15 June 2020

கோப மேலாண்மை / anger management

 கோப மேலாண்மை  / anger management        

             ஒவ்வொரு நாளும் மாறி வரும் சூழலில் காரணமின்றி கூடக்கோபம்   (angry) வருகிறது. கோப மேலாண்மை செய்யத் தெரிந்தால் மட்டுமே பிரச்சனையை குறைக்க முடியும்.
            கோப மேலாண்மை செய்யத் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி என்று நீங்கள் கேட்பதற்கு முன் நான் பதிலைப் பதிவு செய்து விடுகிறேன்.
                கோபம்  நமக்கு எதனால் ஏற்பட்டது அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எதனால் ஏற்பட்டது, எனக் கோபத்தின் மூலக் காரணத்தை அறிய முற்பட வேண்டும்.
                அவரின் கோபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கோபத்தை மற்றவருக்குப் புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
         
            

கோபத்தின் விளைவுகளை யோசித்தல்:

              நாம் கோபப்பட்டால் என்னென்ன நடக்கும். என்னென்ன  மாறும், என்னென்ன பிரச்சனை ஏற்படும். இப்படி கோபத்தின் விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.

                    கோபம் கொள்ளமால் எந்தெந்த வழிகளில் பிரச்சனை சமாளிக்க முடியும் என்ற சரியான தீர்வை யோசித்தல் வேண்டும்.
                சரி நண்பா. கோபம் தலைக்கு மேல் ஏறி  விட்டது. என்னதான் செய்வது. கோபம் ஏற்படுத்திய நபர் அல்லது கோபம் கொள்ளக் காரணமானச் சூழ்நிலை ஆகியவற்றில் பேசு வதற்கு முன் யோசித்தல் அவசியம்.

கோபம், சொல் இரண்டின் ஒப்புமை:

                  சொல்லைக்கொட்டினால் அள்ள முடியாது. கோபத்தில் வரும் வார்த்தைகள் எதிரே உள்ளவரை மனதில் அம்பு போல் பாய்த்து ஆறாத வடுவாகி விடும். எனவே பேசும் முன் யோசித்தலே பாதி பிரச்சனை குறையும்.    
          
            கோபம் வந்தபின் சிறிது அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருந்தால் தான் கோபம் மேலாண்மைச் செய்யலாம்.
                                          கோபம் வந்தஉடன் படபடவென்று சொல்லைக்கொட்டாமல், சிறிது நேரம் இடைவெளி விட்டு பேசுங்கள்.
         என்னுடைய கோபத்தின் காரணம் இது தான் என்று கோபத்தின் காரணங்களைக்கூறி ஆறுதல் பெற வேண்டும்.
               கோபம் வந்தால் என்னென்ன நோய் வரும் என்று "கோபத்தைக் குறைக்க"என்ற எனது கட்டுரையில் கூறி இருந்தேன். அதைப் படித்துப் பாருங்கள். இதைத்தொட்டுப் படிங்க https://pandiarajan1988143.blogspot.com/2020/06/manage-angry.html?m=1

கோபம் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:                    




                       கோபம் எனக்கு வரக்கூடாது. நான் என்னென்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் முதலில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

                      தினந்தோறும் பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். கைப்பயிற்சி, கால் பயிற்சி செய்யுங்கள். 

கோப மேலாண்மையில் எழுத்துப்பயிற்சி:

            கோபத்தைக்கையாள  கோபம் வந்ததும்  அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுங்கள். தனி அறையில் சென்று பேப்பர், பேனா எடுத்து அவரை பற்றி எழுதித் தள்ளுங்கள். பின்பு படியுங்கள் பேப்பரை கிழித்து எறியுங்கள். எழுதுவது சிரமம் என்றால், உங்களிடம் இருக்கும் smart phone யை வைத்து டைப் செய்து பின்னர் clear all  கொடுத்து   delete செய்ய வேண்டும்.

              இப்படி செய்யக் கோபத்தை சிறப்பாகக் மேலாண்மை செய்ய  முடியும்.

கோபத்தைக்குறைக்க மூச்சுப்பயிற்சி:

                             கோபம் வந்தவுடன் மனது படபடப்புடன் இருக்கும். இதைக்குறைக்க ஒரு கப் தண்ணீர் பருகலாம். உடல்  மூச்சின் வேகம் குறைந்து மன அழுத்தம் குறையும்.

           கோபம் அடக்க முடியாமல் இருந்தால் ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். மீண்டும் மீண்டும் மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு செய்வதால் கோப மேலாண்மை மேம்படும்.

கோப மேலாண்மையில் எண்களை  எண்ணுங்கள்:

           ஒன்று முதல் பத்து வரை எண்களை ஏறுவரிசையில் எண்ணுங்கள். பின்பு பத்திலிருந்து ஒன்று வரை எண்களை இறங்கு வரிசையில் எண்ணுங்கள். கோபம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
            தினமும் தியானம், முத்திரை பயிற்சி செய்தால் கோபத்தை விரட்ட முடியும். தினமும் காலை அல்லது மாலைவேளைகளில் பத்து நிமிடங்கள் ஒதுக்கித் தியாானம் செய்யும்போது கோபம் குறையும். இப்படி செய்தால் கோப மேலாண்மை மேம்படும்.
                 

  கோப மேலாண்மை மேம்பட ஆலோசனை:          


               கோபம் கட்டுபடுத்த தம்மால் முடிய வில்லை என்றால் கோபத்தை மேலாண்மை செய்ய பிறரை அணுகி ஆலோசனைப் பெறலாம். உளவியல் நிபுணர்கள், ஆலோசகர், மருத்துவர் போன்றோரின் உதவியை நாடி கோபத்தைக் கையாள முடியும்.

                              பிறர் எவ்வாறு கோபத்தை ஆரோக்கியமான முறையில் மேலாண்மை செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்து வர உங்களால் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.

கோபத்தைக் குறைக்க வீடியோ:

                        கோபம் வந்தவுடன் பதற்றம் வந்து சேரும். அப்பொழுது பதற்றத்தைக் குறைக்க நகைச்சுவை வீடியோ பாருங்கள். அல்லது நகைச்சுவை பேச்சைப் பயன்படுத்தி பேசுங்கள். இப்படி நகைச்சுவையாக பேசியும் உங்கள் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.

கோப மேலாண்மையில் மன்னிப்பு:

               கோப மேலாண்மையில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆய்தம் மன்னிப்பு. பிறர் செய்த செயலை மன்னித்துவிடுங்கள்.
                       
 
                              அவர்மீது வன்மத்தை வைத்துப்பழிவாங்கும் உணர்வைத் தூக்கி வீசுங்கள்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று ".
                                    என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின்  திருக்குறள் படி நடப்போம்!!
மறப்போம் !! மன்னிப்போம் !!கோப மேலாண்மை சிறப்பாகச் செய்வோம்!!!
   
     இந்தப் படத்தைத் தொட்டுப்படிங்க.